பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 379

சிறகுகளை   உடைய  அந்தக்  கருடன்;  நிமிரச்  சென்று - நேராகச்
சென்று; உன்னும்  முன்னம்  உடன்  ஆயினான்  -  நினைப்பதற்கு
முன்பே இராமனிடம் சென்று சேர்ந்தான்.
 

பொன்  துன்னி  அன்ன  வெயில் - பொன்  போன்ற  நிறமுடைய
கருடனின் உடம்பில் இருந்து வருகின்ற ஒளி.
 

                                                 (262)
 

8264.வாசம் கலந்த மரை நாள நூலின்
    வகை என்பது என்னை?-மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல்
    சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல்
    அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற-
    பதகன் துரந்த உரகம்.
 

பதகன்  துரந்த உரகம் - பாதகனாகிய இந்திரசித்தன் (இலக்குவன்
மீது  வானரப்  படைமீதும்)  செலுத்திய  பாம்புக்கணை; மழை என்று
ஆசங்கை  கொண்ட
 -  மேகங்கள்  என்று  ஐயம்  கொள்ளுவதற்கு
இடமாக  உரிய; கொடை  மீளி  அண்ணல்  - கொடை கொடுப்பதில்
வலிமை மிக்க பெரியோன் ஆகிய; சரராமன் - சடையப்ப  வள்ளலுக்கு
உரிய; வெண்ணை  அணுகும்  - திருநெல்வெண்ணெய் எனும்  ஊரை
நெருங்கிச்  சேர்ந்த; தேசம்  கலந்த  மறை வாணர் - தேசஸ் ஆகிய
ஒளி பொருந்திய அந்தணர்களும்; செஞ்சொல் அறிவாளர் - செவ்விய
கூரிய  சீரிய செஞ்சொல் புலவர்களும்; என்று இம்முதலோர் - என்று
இவர்களை  முதலாகக்  கொண்ட  சுற்றத்தார்கள்; பாசம்  கலந்த பசி
போல்
- அடைந்துள்ள பசிபோல்; அகன்ற - இருந்த இடம் தெரியாது
மறைந்து   விட்டது;   (அவ்வாறு   துண்டுபட்டு  அழிந்து   மறைந்த
நாகங்களை)  வாசம்  கலந்தமரை  -  மணம்  பொருந்திய  தாமரை
மலரினது; நாள நூலின் வகை - தண்டின் உள்ளே  உள்ள மெல்லிய
நூலின்  தன்மையை  அடைந்து  விட்டது; என்பது என்னை - என்று
சொல்லுவது என்ன சிறப்பு உள்ளது.
 

இராம  சரிதத்தின்   இடையில்   தன்னை   ஆதரித்துக்  காத்த
வள்ளலின்  சிறப்பைப் பாடிய கம்பரின் செய்நன்றி மறவாச் செம்மை
உள்ளத்தை எண்ணுக.  நேரடியாக  வள்ளலைச்  சிறப்பித்தல், மறை