பக்கம் எண் :

382யுத்த காண்டம் 

முளையாத திங்கள் உகிரான் முன் வந்து,
     முறை நின்ற வீரன் மொழிவான்;
 

முறை   நின்ற வீரன் - அறமுறையில் நின்ற வீரனாகிய இராமன்;
எழுந்து  இளையான்  தொழுவானை  -  மயக்கம்  நீங்கி  எழுந்து
வணங்குபவனான  இளையவனாகிய இலக்குவனை; அன்பின் - அன்பு
மிகுதியால்; இணை ஆர மார்பின் அணையா - இணைந்த மாலைகள்
பொருந்தி   உள்ள  மார்பில்  இறுகத்  தழுவி; விளையாத  துன்பம்
விளைவித்த தெய்வம்
- வரக்கூடாத பெருந் துன்பத்தை உண்டாக்கிய
தெய்வம்; வெளி  வந்தது  என்ன - கருடன் வடிவில் வெளி  வந்தது
என்று கூறி; வியவா - வியந்து; கிளையார்கள் அன்ன - உறவினர்கள்
போன்ற; துணையோரை - துணைவர்களாகிய வானர வீரர்களை; ஆவி
கெழுவா எழுந்து தழுவா
- உயிர் ஒன்றாகுமாறு நெருக்கமாக எழுந்து
தழுவி; முளையாத திங்கள்  உகிரான் முன்வந்து - பிறைச் சந்திரன்
போன்ற நகங்களை உடைய கருடனுக்கு முன்னால் வந்து; மொழிவான்
- (இவற்றைக்) கூறினான்.
 
 

வெளி வந்தது -  கருட வடிவில் வெளி வந்தது, திங்கள் உகிரான் -
சந்திரனைப் போன்ற நகங்களை உடைய கருடன்
 

                                                (266)
 

                                 இராமன் கருடனிடம் பேசுதல்
 

8268.‘ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து,
                                          இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய் திறம் இலையால்’ என்றான்-தேவர்க்கும் தெரிக்க
                                      ஒணாதான்.
 

தேவர்க்கும்  தெரிக்க  ஒணாதான் - தேவர்களும்  கூட(த்  தன்
சொரூபத்தை)  அறிய  முடியாது  உள்ளவனாகிய  இராமன்;   ஐய  -
(கருடனைப் பார்த்து)  ஐயா; நீ யாரை - நீ யார்; எங்கள் அருந்தவப்
பயத்தின்
-  நாங்கள் செய்த மிக்க தவத்தின் பயனால்;  இங்கு வந்து
எய்தினை
- இங்கு வந்து அடைந்தாய்; உயிரும் வாழ்வும் ஈந்தனை -
(நாகக்   கணையால்   இறந்தவர்களுக்கு)    உயிரையும்   வாழ்வையும்
தந்தாய்; எம்மனோரால்  -  எங்களைப் போன்றவர்களால்;  கையுறை
கோடற்கு ஒத்த காட்சியை அல்லை
- காணிக்கைப் பொருள்