கொள்ளுவதற்கு உரிய தோற்றம் உடையவனாயும் இல்லை; மீட்சி செய்திறம் இலையால் என்றான் - (எனவே நீ செய்த உதவிக்குக்) கைம்மாறு செய்ய வழி இல்லை என்றான். |
(267) |
| 8269. | ‘பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ, புந்தித் தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச் செல்வ! மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால் அருளினைஎன்னின், எய்த அரியன உளவோ?-ஐய! |
ஐய! - ஐயனே; செயல் அருங் கருணைச் செல்வ - செய்தற்கு அரிய அருட் செயல் செயத் செல்வனே! மருளினின் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் - மயங்கி வருந்தவதற்கு இடமாக வந்ததே இந்த வாழ்க்கை என்றால்; வாயால் அருளினை என்னின் - (நீ) வாயினால் அருள்கொண்டு வரம் தருவாய் என்றால்; எய்த அரியன உளவோ - (எங்களால்) எய்த முடியாத அரியபேறுகள் எவையேனும் உள்ளதா? புந்தித் தெருளினை உடையர் ஆயின் - அறிவுத் தெளிவு உடையவர்களாய் இருந்தால்; பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ? - (நீ செய்த இந்த உதவியின்) பொருளினை உணர்ந்து கொள்ள வேறு பொருள் புறத்தில் ஒன்றும் இல்லை. (நீ செய்த உதவிக்குக் கைம்மாறாகக் கொடுக்கப் புறத்தில் எப்பொருளும் இல்லை என்றபடி) |
(268) |
| 8270. | ‘கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன் ஒன்று எம்பால் கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது நின் கொள்கை; “உண்டு, இலை” என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே! பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி!’ என்றான். |
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே - உண்டோ இல்லையோ என்று ஐயங் கொள்ளும்படியாக நின்றிருந்த இலக்குவன் உயிரை (மீட்டும்) தந்த உதவியோனே! |