பண்டு நண்பு இலை - (உனக்கும் எங்களுக்கும்) முன்பு (எந்த விதமான) நட்பும் இல்லை; முன்பு கண்டிலை - முன்னால் (நீ எங்களைக்) கண்டதுமில்லை; சொல்லக் கேட்டிலை - (எங்களைப் பற்றி மற்றவர்) சொல்லக் கேட்டதும் இல்லை; எம்பால் - எங்களிடம்; கடன் ஒன்று கொண்டிலை - கடனாக எந்த ஒன்றையும் பெற்றுக் கொண்டதும் இல்லை; கொடுப்பது அல்லால் - எங்களுக்குச் கொடுப்பது அல்லாமல்; குறை இலை - இதுவே உனது கோட்பாடாக இருக்கிறது; நாங்கள் செய்வது என் பகர்தி - நாங்கள் (உனக்குச்) செய்யும் கைம்மாறு என்ன சொல்; என்றான் - என்று (இராமன்) கேட்டான். |
எங்களுக்கும் உனக்கும் இதுவரை எத்தகைய தொடர்பும் இல்லை எனினும் நீ எங்களுக்குக் கைம்மாறு கருதாது உயிர் தந்து பேருதவி புரிந்து உள்ளாய். அப்படிப்பட்ட உனக்கு நாங்கள் எவ்வகையில் உதவுவது என்று இராமன் கருடனைப் பாராட்டிக் கூறியவாறு. கண்டிலை - கேட்டிலை என்பவற்றுக்கு எங்களால் முன்பு காணப்பட்டாயில்லை. கேட்கப்பட்டாயில்லை என்று இராமன் கூற்றாக வைத்தலே பொருந்தும்; கருடன் இவர்களைக் கண்டானா? கேட்டுள்ளானா? என்பதை இவன் விசாரித்தல் பொருந்தாது என்பது மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணின் அவர்கள் கருத்து. |
(269) |
கருடன் மறுமொழி கூறி விடை பெறல் |
8271. | பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், ‘பழைய நின்னோடு உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம் மற வினை முடித்த பின்னர், வருவென்’ என்று உணர்த்தி, ‘மாயப் பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் பெயர்ந்து போனான். |
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் - பறவைக் கூட்டங்களைப் பாதுகாக்கின்ற தூயவனாகிய கருடன்; மாயப் பிறவியின் பகைஞ - (இராமனைப் பார்த்து) மாயப்பிறப்பறுக்கும் பிறவியின் பகைவனே; நின்னோடு பழைய உறவு உள தன்மை எல்லாம் - உன்னோடு (எனக்குப்) பழைய உறவு உள்ள தன்மைகளை எல்லாம்; அரக்கனோடு - அரக்கனாகிய |