பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 387

எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ.

 

அண்ணல் - தலைமைப் பெருமை உள்ள இராமன்; அழகிது என்று
கூற
 -  (இதுவே)  தகுதி  உடையது  என்று  கூற; கடல்கள் அஞ்சிக்
குழைவுற
 -  (வானரப்  படைவீரர்கள்)  கடல்கள்  எல்லாம்  அஞ்சிக்
கலக்கமுறவும்;  அனந்தன்  குன்றின்  உச்சி  நின்று - ஆதிசேடனது
மலைபோன்ற  தலையின்  உச்சியில்  இருந்து; அண்ட கோளம் மிசை
எழ
 -  உலக உருண்டை மேல் நோக்கி எழவும்; உலகம் மேல் மேல்
ஏங்கிட
 -  உலகத்து  உயிர்கள் மேலும் மேலும் ஏக்கம்  கொள்ளவும்;
மழை  இரிந்து  சிந்திவிழ - மேகங்கள் நிலை கெட்டுச் சிதறி விழவும்;
மலைகள்  கீற - மலைகள் பிளவுபடவும்; மாதிரம் பிளக்க - திசைகள்
பிளவுபடவும்; ஆர்த்தனர் மாதோ - பேரொலி செய்தனர்.
 
 

                                                (273)
 

                             இராவணன் ஆர்ப்பொலி கேட்டல்
 

8275.பழிப்பு அறு மேனியாள்பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிரிப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன்
                                    கேட்டான்.
 

பழிப்பு  அறு  மேனியாள்  பால் -  பழிப்பதற்கு  அருமையான
திருமேனி  அழகுடைய சீதையின் இடத்தில்; சிந்தனை  படர - மனம்
சென்று பரவியதனால்; கண்கள் விழிப்பு இலன் - கண்களை விழித்துப்
பார்த்தலும்  இல்லாதவனாய்; மேனி  சால  வெதும்பினன் -  உடம்பு
விரகவேதனையால்   மிக   வெதும்பப்பெற்று;  ஈசன்   வேலும்   -
சிவபிரானது   சூலவேலும்;  குழிப்பு   அரிது   ஆய   மார்பை -
துளைப்பதற்கு   அருமையான  (மிக்க  வலிமைஉடையதன்)   மார்பை;
மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற - மன்மதனது வெற்றி பொருந்திய
அம்புகள்  ஊடுருவிப்  புறம்  போக;  உயிர்ப்பு  வீங்கி - பெருமூச்சு
மிகுதியாக; கிடந்த - விட்டுக்கொண்டு கிடந்த; வாள் அரக்கன் - வாள்
படையை  உடைய  அரக்கனாகிய இராவணன்; கேட்டான் - (வானரப்
படையினர் எழுப்பிய பேரொலியைக்) கேட்டான்.