பக்கம் எண் :

388யுத்த காண்டம் 

ஒண்ணுதற்கோ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

                                 தகையணங்குறுத்தல் - 8
 

என்ற குறளை நினைவுபடுத்தலை உணர்க.
 

                                                (274)
 

8276.தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்?
 

தாதை சொல் தலை மேல் கொண்ட - தந்தையாகிய  (தசரதனது)
சொல்லைத்   தலைமேற்கொண்டு   செயல்   செய்த;   தாபதன்   -
தவவேடத்தை  உடையவனும்;  தரும மூர்த்தி  - அறந்தலை  நிறுத்த
வந்தவனும்;   ஈதைகள்   தீர்க்கும்   நாமத்து    இராமனை   -
ஓதியவர்களுடைய  துன்பங்களை நீக்கும் திருப்பெயரை   உடையவனும்
ஆய  இராமனை; எண்ணி  ஏங்கும்  சீதையும்  -  எண்ணி எண்ணி
வருந்துகிற   சீதையும்;  அவளை  உன்னி  -  அவளை   நினைத்து;
சிந்தனை  தீர்ந்தும் தீராப் பேதையும் - (அவள் தன்னை விரும்பாள்
எனத்)   தெரிந்தும்   (அவளிடத்தில்   கொண்ட)  மோகம்   நீங்காத
அறிவிலியாகிய  இராவணனும்; அன்றி - ஆகிய  அவர்களைத்  தவிர;
அவ் ஊர்  - அந்த  இலங்கையில்; துயில் பெறாதார் யார் உளர் -
தூங்காதவர்கள் யார்? ஒருவரும் இல்லை என்றபடி.
 
 

                                                (275)
 

8277.சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், ‘சீற்றச் சேனை
பொங்கியது’ என்ன, மன்னன் பொருக்கென எழுந்து,
                                        ‘ “போரில்
மங்கினர் பகைஞர்” என்ற வார்த்தையே வலியது!’ என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க
                                           நக்கான்.
 

சிங்க ஏறு மன்னன் - ஆண் சிங்கம் போன்றவனாகிய இராவணன்;
அசனி  ஏறு  கேட்டலும்  -  ஆணிடி  போன்ற (வானரப் படையின்)
பேரொலி கேட்ட உடனே;   சீற்றச் சேனை பொங்கியது