பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 389

என்ன   -  சினம்  மிக்க  வானரப்படை போருக்கு  எழுந்தது என்று
எண்ணி;  பொருக்கென   எழுந்து -  விரைவாக  எழுந்து;  போரில்
மங்கினர்  பகைஞர்  என்ற
- போரில் பகைவர்கள் இறந்து ஒழிந்தனர்
என்று  (இந்திரசித்தன்  கூறிய); வார்த்தையே  வலியது  என்னா  -
சொற்கள் (மிக)வலிமை உடையனவாய் உள்ளன என்று  இகழ்ந்து  கூறி;
அங்கையோடு    அங்கை    கொட்டி  -    உள்ளங்   கையோடு
உள்ளங்கையைச்  சேர்த்துத் தட்டி; அலங்கல் தோள் குலுங்க நக்கான்
- மாலை அணிந்த (தன்) தோள்கள் குலுங்குமாறு சிரித்தான்.
 
 

                                                (276)
 

8278.‘இடிக்கினற் அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போல்
                                            வில்;

வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன்
                                         ஆர்ப்பு;
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின்
                                         பெற்றி,*
 

இராமன்   போர்  வில்  -  இராமனுடைய  போர்  செய்தற்குரிய
வில்லானது; இடிக்கின்ற  அசனி உன்ன இரைக்கின்றது - இடிக்கின்ற
இடி  போலப் பேரொலி செய்கின்றது; தம்பி வில் நாண் - தம்பியாகிய
இலக்குவனது   வில்  நாணொலி; அண்டம்  வெடிக்கின்றது  என்ன
படுவது 
 -   இந்த    அண்டகோளம்    வெடிபடுகிறேதா    என்று
எண்ணும்படி   ஒலிக்கின்றது;   அனுமன்  ஆர்ப்பு  - அனுமனுடைய
பேரொலி; என்னை - என்னுடைய; செவிதொறும் வந்து அடிக்கின்றது
- செவிகள் தோறும் வந்து  தாக்குகின்றது;  பருதி  சேய்  ஆர்ப்பின்
பெற்றி
-  கதிரவன் மகனாகிய  சுக்கிரீவனின்  பேரொலியின்  தன்மை;
உலகம்  எங்கும் பிடிக்கின்றது - உலகம் முழுதும் பரவி ஒலிக்கின்றது.
 

                                                (277)
 

8279.‘அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,