பக்கம் எண் :

390யுத்த காண்டம் 

பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க.*

 

அவனும்   அங்கதன் ஆர்த்தான் - அந்த அங்கதனும் பேரொலி
செய்கின்றான்; வெங்கத  நீலன்  -  கொடும் சினம் உடைய  நீலனும்;
அந்தரம்   ஆர்க்கின்றானும்    -   விண்ணில்   ஓசை   எழுமாறு
ஒலிக்கின்றான்; மற்றை வீரரும் - பிற வானர வீரர்களும்; வேறு வேறு
-  தனித்தனியாகப்; பொங்கினர்  ஆர்த்த  ஓசை  -  மன மகிழ்ச்சி
கொண்டு  ஒலித்த  பேரொலி; அண்டத்தும் புறத்தும் போன - இந்த
அண்டத்திலும்  அதற்கு  அப்பாலும்  பரவின; தருமம் நல்க - அறம்
துணை  நின்றதனால்; பாசத்தை - நாகக் கணையில் இருந்து;  சங்கை
ஒன்று  இன்றித் தீர்ந்தார்
- ஐயம் எதுவும் இல்லாமல் நீங்கினார்கள்;
(வானரப் படையினரும் இலக்குவனும் என்க.)
 

                                                (278)
 

                   இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்
 

8280.என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில்நின்றும் மகன் தனிக் கோயில்
                                     சார்ந்தான்.*
 

வேந்தன்  - அரசனாகிய இராவணன்; என்பது சொல்லி - என்பது
பலவற்றைத்  (தனக்குள்)  சொல்லிக்கொண்டு; பள்ளிச் சேக்கை நின்று
இழிந்து
 -  படுக்கையில் இருந்து  இறங்கி;  வாட்கை ஒன்பது கோடி
அரக்கர்
 - வாளைக் கையில் ஏந்திய ஒன்பது கோடி அரக்க வீரர்கள்;
வந்து  உழையின்  சுற்ற - திரண்டு வந்து பக்கங்களில் சூழ்ந்து உடன்
வரவும்;  பூங்குழை  மகளிர்  கோடி  - அழகிய காதணியை அணிந்த
மகளிர் கோடியளவினர்; பொன் பொதி விளக்கம் ஏந்த - பொன்னால்
செய்யப்பட்ட விளக்குகளை ஏந்தி உடன் வரவும்; தன் பெருங்கோயில்
நின்றும்
- தன் பெரிய அரண்மனையில் இருந்து; மகன் தனிக்கோயில்
சார்ந்தான்
-