பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 391

மகனாகிய  இந்திரசித்தனது  சிறப்புடைய அரண்மனைக்குச் (சென்று)
சேர்ந்தான்.
 

                                               (279)
 

8281.தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார் தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார்,
                                       மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார்.
 

வல்லி  வாங்கிய மருங்குல் மாதர் - பூங்கொடியையும் பின்னிடச்
செய்த  இடையினை  உடைய பெண்கள்; தாங்கிய துகிலார் - (கையில்
தூக்கித்)  தாங்கிய  சேலையை உடையவராயும்; மெள்ளச் சரிந்து வீழ்
குழலார்
  -  (கூட்டி  முடிக்கப்  பெறாமையால்)  மெல்லச்  சோர்ந்து
தொங்குகிற கூந்தலை உடையவராயும்; தாங்கி வீங்கிய உயிர்ப்பார் -
தடைப்பட்டுப்   பின்பு   மிகுதியாக   வெளிப்படுகிற   பெருமூச்சினை
உடையவராயும்; விண்ணை  விழுங்கிய  முலையார்  -  ஆகாயத்தை
இடமின்றி   விழுங்கிய    (பருத்த)   மார்பகங்களை   உடையவராயும்;
மெல்லத் தூங்கிய  விழியார் - அரை குறையாகத் தூங்கிய கண்களை
உடையவராயும்; தள்ளித்  துளங்கிய  நடையார்  - தடுமாறி நடுங்கும்
நடையினை  உடையவராயும்; அனந்தரால்  மயங்கி வந்தார் - தூக்க
மயக்கத்தால் மயங்கி (இராவணனோடு) வந்தார்கள்.
 
 

                                                (280)
 

8282.பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க*
 

வானவர் மகளிர்  -  தேவமாதர்கள்;  பானமும் -  மதுபானமும்;
துயிலும் - தூக்கமும்;  கண்ட கனவும் - (தாங்கள் கண்ட) கனவுகளும்;
பண் கனிந்த பாடல் கானமும்   - (இராவணனைப்