புகழ்ந்து பாடப்பட்ட) இசைகனிந்த இனிய பாடல்களும்; தள்ளத் தள்ள - (தம்மைச்) சூழ்ந்து சுற்றித்தள்ளத் தள்ள; களியொடும் கள்ளம் கற்ற மீனினும் - மதச் செருக்குடன் வஞ்சனையைக் கற்றுள்ள மீனைக்காட்டிலும்; பெரிய வாட்கண் - பெரிய ஒளி பொருந்திய (தங்கள்) கண்கள்; விழிப்பது முகிழ்ப்பது ஆக - திறப்பதும் மூடுவதுமாக (இருக்க); அம் சதங்கை மழலை மாழ்க - அழகிய சதங்கைகள் மென்மையாக ஒலிக்கப்; போனார் - (இராவணனுடன்) சென்றார்கள். | (281) | 8283. | மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி, உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா, பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய், இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள்தோறும். | மழையினை நீலம் ஊட்டி - மேகத்திற்கு நீல நிறத்தை ஏற்றி; வாசமும் புகையும் ஆட்டி - (அதற்கு) மணத்தையும் (அகில்) புகையையும் ஊட்டிச்; சுருட்டி - சுருளச் செய்து; உழை உழைமென் பூக்குவித்து - இடை இடையே மென்னைமயான மலர்களைச் சேர்த்துச் சொருகி; இடைக்கு இடையூறு என்னா - நூலிடைக்குத் துன்பம் உண்டாகும் என்று கருதாமல்; பிழையுடை விதியார் செய்த - பிழையை உடைய விதி உண்டாக்கிய; பெருங்குழல் - நீண்ட கூந்தலையும்; கருங்கண் - கருமையான கண்களையும்; செவ்வாய் - சிவந்த வாயினையும் உடைய; இழை அணி மகளிர் - அணிகலன்களை அணிந்த பெண்கள்; அனந்தரால் - தூக்கக் கலக்கத்தோடு; இடங்கள் தோறும் சூழ்ந்தார் - பக்கங்களில் எல்லாம் (இராவணனைச்) சூழ்ந்தார்கள். | (282) | 8284. | தேனிடை, கரும்பில், பாலில் அமுதினில், கிளவி தேடி, மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி, |
|
|
|