| மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி, வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார். |
வானுடை அண்ணல் - சத்தியலோகத்தைத் தனக்கு உரிமையாக உடைய பிரமதேவன்; தேனிடை - தேன் இடத்திலும்; கரும்பில் - கரும்பின் இடத்திலும்; பாலில் - பாலின் இடத்திலும்; அமுதினில் - தேவர்களின் அமுதத்தின் இடத்திலும்; கிளவி தேடி - (உள்ள இனிய பகுதிகளைப்) பேச்சினை (உருவாக்கத்) தேடி அமைத்து; மானிடை - மானின் இடத்திலும்; கயலில் - கயல் மீனிடத்திலும்; வாளில் - வாளின் இடத்திலும்; மலரிடை - மலர்களின் இடத்திலும்; நயனம் வாங்கி - (உள்ள சிறப்புப் பகுதிகளைச் சேர்த்துக்) கண்களாகச் சமைத்து; மற்றும் அனைய மேல் நடை - மற்றும் அவை போன்ற சிறப்புடையவைகளான; நல்வழி நல்கவேண்டி - நல்ல வகைகளைக் கொண்டு படைக்க விரும்பி; செய்த மங்கையர் - படைத்த மகளிர்; மருங்கு சென்றார் - (இராவணன் உடைய) பக்கங்களில் சென்றார்கள். |
(283) |
8285. | தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும், இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும், மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர் அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார். |
தொடங்கிய - (வானரப் படையினர்) தொடங்கிச் (செய்த); ஆர்ப்பின் ஓசை - பேரொலி; செவிப்புலம் தொடர்தலோடும் - காதுகளாகிய புலத்தில் நுழைந்த உடனே; இடங்கரின் வயப் போத்து அன்ன - வலிய ஆண் முதலையை ஒத்துள்ள; எறுழ் வலி அரக்கர் யாரும் - மிக்க வலிமை உடைய அரக்கர்கள் எல்லோரும்; மடங்கலின் முழக்கம் கேட்ட - சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட; வான் கரி ஒத்தார் - பெரிய யானைகளை ஒத்து விளங்கினார்கள்; மாதர் அடங்கலும் - அரக்கப் பெண்டிர் எல்லோரும்; அசனி கேட்ட - இடி முழக்கம் கேட்ட; அளை உறை அரவம் - புற்றில் வாழும் பாம்புகளை; ஒத்தார் - ஒத்தார்கள். |
(284) |