பக்கம் எண் :

394யுத்த காண்டம் 

                            இந்திரசித்தனை இராவணன் காணல்
 

8286.அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்த மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி
                                        பொங்கத்
தரிக்கிலன், மடங்கல்ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து
                                        போன,
கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான்.
 

அரக்கனும்  -  அரக்கனாகிய இராவணனும்; மைந்தன் வைகும் -
தன்  மகனாகிய  (இந்திரசித்தன்)  தங்கி உள்ள; ஆடகத்து அமைந்த
மாடம்
 -  பொன்னால்  செய்யப்பட்ட மாளிகைக்குள்; பொருக்கெனச்
சென்று  புக்கான்
 -  விரைவாகச் சென்று  சேர்ந்தான்; புண்ணினில்
குமிழி  பொங்கத்
 -  (இலக்குவனது  அம்புகள் துளைத்த) புண்களில்
(இருந்து) இரத்தக்குமிழி பொங்கி வெளிப்படத்; தரிக்கிலன் - பொறுக்க
மாட்டாதவனாகி;  மடங்கல்   ஏற்றால்   -   ஆண்  சிங்கத்தினால்;
தொலைப்புண்டு சாய்ந்து  போன - வலிமை கெட்டு ஒழிந்து போன;
கருக்கிளர் மேகம் அன்ன - கருமையான நீர் பொருந்திய மேகத்தைப்
போன்ற;  களிறு அனையானைக்  கண்டான்  - ஆண் யானையைப்
போன்றவனாக உள்ள இந்திர சித்தனைக் கண்டான்.
 

                                                (285)
 

8287.எழுந்து  அடி  வணங்கல்  ஆற்றான்,  இரு  கையும்
                                 அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன்,
                                     ‘தோன்றல்!
அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது?’ என்று எடுத்துக்
                                      கேட்டான்;
புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்;
 

எழுந்து  அடி வணங்கல் ஆற்றான் - எழுந்து (தந்தையின்) அடி
வணங்குவதற்குக் கூட முடியாதவனாய்; இருகையும் அரிதின் ஏற்றித் -
(தன்     இரண்டு)      கைகளையும்     (பெருமுயற்சி      செய்து)
அருமைப்பாட்டோடு  (தலைக்கு) மேல் தூக்கி; தொழும் தொழிலானை
நோக்கித்
- தொழுகின்ற தொழிலை உடையவனான