இந்திரசித்தன் பார்த்து; துணுக்குற்ற மனத்தன் - நடுக்கம் கொண்ட மனத்தை உடையவனாய்; தோன்றல் - தோன்றலே; அழுங்கினை - (நீ) மிக வருத்தம் கொண்டு உள்ளாய்; அடுத்தது - அண்மையில்; என்னை வந்தது - உனக்கு என்ன தீங்கு வந்தது; என்று எடுத்துக் கேட்டான் - என்று பல தடவை கேட்டான்; புழுங்கிய புண்ணினானும் - துன்பம் உற்று வருந்துவதற்குக் காரணமாகிய புண்களை உடையனாகிய இந்திரசித்தனும்; இனையன புகலலுற்றான் - இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினான். |
(286) |
இந்திரசித்தன் மறுமொழி |
8288. | ‘உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப் பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள் செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்? |
ஐய! - ஐயனே; அளப்பில்லாத பகழிகள் - (இலக்குவன் என் மீது தொடுத்த) மிகப்பலவாகிய அம்புகள்; உரத்தை முற்றும் உருவின - என் மார்பு முழுவதும் பாய்ந்து ஊடுருவின்; உலப்பு இல உதிரம் வற்றப் பருகின - குறைந்து அழிதல் இல்லாத (என் உடம்பில் உள்ள) குருதியை வற்றிப் போகுமாறு பருகி விட்டன; கவசம் பற்று அற்று அருகின - (என் மார்புக்) கவசங்கள் நெக்கு விட்டுப் பிளந்தன; பின்னை சால அலசினென் - பின்பு மிகவும் தளர்ந்து போனேன்; கண்கள் செருகின அன்றே - (என்) கண்கள் சொருகிவிட்டன அல்லவா? யானும் - நானும்; மாயையின் தீர்ந்திலேனேல் - மாயையினால் மறையாமல் இருந்து இருப்பேன் என்றால்; (இறந்தே போய் இருப்பேன் என்றவாறு) |
(287) |
8289. | இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும் சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில், |