பக்கம் எண் :

396யுத்த காண்டம் 

நொந்திலென்; இனையதுஒன்றும் நுவன்றிலென்; மனிதன்
                                        நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று
                                         மன்னோ.
 

மந்தரம்    அனைய தோளாய் - மந்தரப்  பெருங்கிரியை ஒத்த
தோள்களை  உடையவனே; இந்திரன்  -  தேவர்   தலைவன் ஆகிய
இந்திரனும்; விடையின் பாகன் - வெள்ளேற்றை வாகனமாகக் கொண்ட
சிவபிரானும்;  எறுழ்  வலிக்கருடன் ஏறும் சுந்தரன் - மிக்க வலிமை
உடைய   கருடனை   ஊர்தியாகக்   கொண்ட   அழகிய  திருமாலும்;
அருக்கன் - கதிரவனும்; என்று - என்று கூறும்; இத்தொடக்கத்தார் -
இத்தன்மை   உடையவர்கள்;  தொடர்ந்த   போரில்   -  (என்மீது)
தொடங்கிய  போரினால்; நொந்திலென் - (நான் சிறிது கூட) வருத்தம்
அடையவில்லை;  இனையது  ஒன்று  நுவன்றிலேன்  -  இத்தகைய
சொற்கள்   ஒன்றையும்   (நான்)  சொல்லியதும்  இல்லை;   மனிதன்
நோன்மை
  -   மனிதனாகிய   இலக்குவனுடைய  வலிமை;  வரம்பு
உடைத்து அன்று
- ஓர் எல்லைக்கு உட்பட்டது அன்று.
 

மன் ஓ - அசைகள்.
 

                                                (288)
 

8290.‘இளைவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று
                                       அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல்
                                  விளையும் என்ன
உளை;அது அன்று’ என்னச் சொன்னான், உற்றுளது
                                 உணர்ந்திலாதான்.
 

தளை  அவிழ் அலங்கல் மார்ப - கட்டு  அவிழ்ந்த  மலர்களால்
ஆகிய   மாலை  அணிந்த  மார்பினை   உடையவனே!;  இளையவன்
தன்மை ஈதால்
- இளையவனாகிய இலக்குவன் (வலிமையின்)   தன்மை
இதுவாகும்;  இராமனது ஆற்றல் எண்ணின் - இராமனது வலிமையைப்
பற்றி  எண்ணிப்  பார்த்தால்;  நம் வயின் தங்கிற்று அன்றால் - நம்
இடத்தில் (எண்ணிப்  பார்க்கும்படி)  பொருந்தியது ஆகாது;  விளைவு
கண்டு உணர்தல் அல்லால்
- இனிமேல் எங்ஙனம்