பக்கம் எண் :

398யுத்த காண்டம் 

                                          இராவணன் உரை
 

8292.‘வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்! என்றான்.
 

ஐய!  - ஐயனே; வார்கழல் கால! - நீண்ட கழல் அணிந்த காலை
உடைய  (இந்திரசித்தனே); மற்று அவ்  இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம்
- அந்த இலக்குவனுடைய வலிமையான வில்லினது
மிகப்பெரிய  ஒலி; விண்ணைப்  பிளந்திட  - ஆகாயத்தைப் பிளக்க;
குரங்கு பேர்த்த - குரங்குகளில் இருந்து எழுந்த பேரொலி; கார் ஒலி
மடங்க
 -  மேகங்களின்  இடியொலி  கூடக்  கீ்ழ்ப்படும்படி  ஒலிக்க;
வேலை கம்பிக்க  -  கடல்கள்  நடுங்கி  நிற்க; களத்தின் ஆர்த்த -
போர்க்களத்தில் (இருந்து) ஆரவாரம் செய்த; பேர் ஒலி - மிகப்பெரிய
ஓசையை; அறிந்திலை  போலும்  என்றான்  -  (நீ)  அறியவில்லை
போலும் என்று (இராவணன்) கேட்டான்.
 

                                                (291)
 

                                         இந்திரசித்தன் வினா
 

8293.‘ஐய! வெம் பாசம்தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு
                                      பேர்ந்தார்;
“உய்யுநர்” என்ற உரைத்தது உண்மையோ? ஒழிக்க
                                       ஒன்றோ?
“செய்யும்” என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ
                                 தெரியின் அம்மா,’
 

ஐய!  -  ஐயனே;  வெம்பாசம்  தன்னால்  ஆர்ப்புண்டார்  -
(இலக்குவனும்  வானரப்படை வீரர்களும்) கொடிய  நாகக்கணையினால்
கட்டுப்பட்டார்கள்; அசனி   என்னப்  பெய்யும்  வெஞ்சரத்தால் -
(அதற்கு மேல்) இடியைப் போல் சொரிந்த