பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 399

(என்னுடைய)     கொடிய  அம்புகளால்;  மேனி  பிளப்புண்டார் -
உடல்கள்   பிளக்கப்பட்டார்கள்;  உணர்வு  பேர்ந்தார்  -  உணர்வு
கெட்டார்கள்;  உய்யுநர்  என்று   உரைத்தது   உண்மையோ? -
(அத்தகைய  நிலை  அடைந்தவர்கள்)  பிழைத்து  உள்ளார்கள் (என்று
நீ  கூறுவது)  உண்மைதானா?;  ஒழிக்க  ஒன்றோ  -   (அவர்களை
நான்   கட்டிய  நாகக்கணை)  ஒழித்து  நீக்குவதற்கு  உரிய  ஒன்றா?;
செய்யும்  என்று  எண்ண  -  (வேறு  ஒன்று  அக்கணையை  வலி
இழக்கச்) செய்யும் என்று; தெரியின் - எண்ணிப் பார்த்தால்; தெய்வம்
சிறிது  அன்றோ  அம்மா
  -  இக்கணையை  எனக்குக்  கொடுத்த
தெய்வம்  சிறுமை அடைந்து விடுமல்லவா?
 
 

                                                 (292)
 

                          களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்
 

8294.இது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
‘யாது அவண் நிகழ்ந்தது?’ என்ன இராவணன் இயம்ப,
                                       ஈறு இன்று,
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்:
 

ஈது  உரை   நிகழும்  வேலை  -  இவ்வாறு  (இராவணனுக்கும்
இந்திரசித்தனுக்கும்  இடையே)  உரையாடல்  நடந்து  வந்த நேரத்தில்;
எய்தியது  அறியப்போன தூதுவர்  -  நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து
வரப்போன   தூதுவர்கள்; விரைவின்  வந்தார்  -  (போர்க்களத்தில்
இருந்து)  விரைவாக  (இராவணன்  இருக்கும் இடம்) வந்து;  புகுந்து -
சேர்ந்து; அடி தொழுதலோடும் - இராவணனுடைய அடிகளில் விழுந்து
வணங்கிய  உடனே; அவண்  நிகழ்ந்தது  யாது  என்ன  இயம்ப -
போர்க்களத்தில்  நடந்தது  என்ன.  என்று  (இராவணன்) கேட்க;  ஈறு
இன்றி ஓதிய கல்வியாளர்
- எல்லை இல்லாது படித்துத் தேர்ந்த கல்வி
அறிவுடைய  தூதர்கள்;  புகுந்துளது - (அங்கு)  நடந்த  நிகழ்ச்சிகளை;
உரைக்கலுற்றார் - சொல்லத் தொடங்கினார்கள்.
 
 

                                                (293)
 

8295.‘பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,