| ஏசத் தான் இரங்கி, ஏங்கி, “உலகு எலாம் எரிப்பென்” என்றான்;- வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்; |
வாசத்தார் மாலை மார்ப! - மணம் மிக்க மாலையை அணிந்த மார்பினை உடையவனே! பாசத்தால் பிணிப்புண்டாரை - நாகக் கணையால் கட்டுண்டு; பகழியால் களப்பட்டாரை - அம்புகளினால் போர்க்களத்தில் மயங்கிப்பட்டவர்களை; தேசத்தார் அரசன் மைந்தன் - கோசலநாட்டுப் பேரரசனாகிய தசரதனது மகனாகிய (இராமன்); இடை இருள் சேர்ந்து நின்று - நள்ளிரவில் சேர்ந்து இருந்து; இரங்கி ஏங்கி ஏசத்தான் - முதலில் பரிதவித்து அழுது ஏசிப்பேசி; உலகு எலாம் எரிப்பென் என்றான் - பின்பு சினம் கொண்டு (எல்லா) உலகங்களையும் எரித்து விடுவேன் என்றான்; வான் உறை கலுழன் வந்தான் - அந்த நேரத்தில் ஆகாயத்தில் வாழுகிற கருடன் (அங்கு) வந்தான். |
(294) |
8296. | ‘அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம் சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்; முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்; இன்னது நிகழ்ந்தது’ என்றார். அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்; |
அன்னவன் வரவு காணா - அந்தக் கருடனது வரவைக் கண்டு; அயில் எயிற்று அரவம் எல்லாம் - கூர்மையான பற்களை உடைய பாம்புக்கணைகள் எல்லாம்; சின்ன பின்னங்கள் ஆன - சிறிய துண்டுகளாய்ச் சிதறிப்போயின; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் - (அதனால் நாகக்கணையால் கட்டப்பட்டிருந்த இலக்குவனும் வானர வீரர்களும்) தங்களுடைய புண்களும் தளர்ச்சியும் நீங்கப் பெற்று; முன்னையின் வலியர் ஆகி - முன்பை விட வலிமை மிக்கவர்களாகி; மொய்க்களம் நெருங்கி மொய்த்தார் - போர்க்களத்தை நெருங்கிச் சூழ்ந்தார்கள்; இன்னது நிகழ்ந்தது |