என்றார் - இத்தகு செயல் (அங்கு) நடந்தது என்று (தூதுவர்கள்) கூறினார்கள்; அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான் - அதற்கு அரக்கனாகிய இராவணன் இவற்றை எடுத்துச் சொல்லத் தொடங்கினான். | (295) | இராவணன் கூற்று | 8297. | “ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின், காண்மின்! வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை! மூத்தது, கொள்கை போலாம்! என்னுடை முயற்சி எல்லாம்? | ஏத்த அருந்தடந்தோள் ஆற்றல் - புகழ்ச்சிக்கு அடங்காத பரந்த தோள் ஆற்றல் உடைய; என் மகன் - எனக்கு மகனாகிய (இந்திரசித்தன்); எய்தபாசம் - செலுத்திய நாகக் கணையைக்; கலுழனாம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் - கருடனென்பவன் (தன் சிறகுக்) காற்றினால் நீக்கி அழித்து விட்டானாம்; காண்மின் காண்மின் - (இந்த அதிசயத்தைக்) காணுங்கள் காணுங்கள்; வார்த்தை ஈது ஆயின் - இந்த சொல் இவ்வாறு ஆயின்; இராவணன் வாழ்ந்த வாழ்க்கை நன்றால் - இராவணன் (இதுவரை) வாழ்ந்த (வீர) வாழ்க்கை அழகிதாய் இருக்கிறது; என்னுடை முயற்சி எல்லாம் - (பகைவர்களை வென்று அழிக்க இதுவரை); நான் செய்த என்னுடைய முயற்சிகள் முழுவதும்; கொள்கை மூத்தது போலாம் - கருத்து வகையால் முதுமை அடைந்து விட்டது போலும். | (296) | 8298. | ‘உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம் கொண்டான்; |
|
|
|