| மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும், கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக் கண்ணால்?
| ஏழும் ஏழும் உலகு உண்டு உமிழ்ந்தவன் - பதினான்கு உலகங்களையும் (அழிவுக்காலத்துத்) தன்னுள் அடக்கி (படைப்புக் காலத்தில்) வெளிப்படுத்தியவன்; என்னும் ஊற்றம் கொண்டவன் - என்னும் வலிமைச் சிறப்புக் கொண்டவனாகிய திருமால்; என்னோடு ஏற்ற செருவினில் - (முன்பு) என்னுடன் எதிரிட்ட போரில்; மறுக்கம் கொண்டான் - மனக்கலக்கம் கொண்டவனாய்; மண்டலம் திரிந்த போதும் - (தோல்வி அடைந்து) சுற்றித் திரிந்த போதும்; மறிகடல் மறைந்த போதும் - (அலைகள்) மடங்கி மேல் எழுகிற கடலினுள் சென்று மறைந்த காலத்திலும்; சொற்ற கலுழன் - (அத்திருமாலின் ஊர்தி என்று சொல்லப்படுகிற கருடன்); அன்று என்னைக் கண்ணால் கண்டிலன் போலும் - அன்று என்னைக் கணணால் காணவில்லை போலும்.
| (297)
| 8299. | ‘கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும் புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி, உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி?
| கரங்களில் - தன் திருக்கைகளில்; நேமி - (தீயவர்களை அழிக்கும் சுதர்சனம் என்னும்) சக்கரப் படையினையும்; சங்கம் - (பகைவரைத்தன் பேரொலியால் குலையச் செய்யும்; பாஞ்ச சன்னியம் என்ற) சங்கினையும் தாங்கிய கரியோன் - தாங்கிய கருநிறம் உடையவனாகிய திருமால்; காக்கும் புரங்களும் - பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற (வானுலகில் உள்ள அமராவதி முதலிய) நகரங்களும்; அழியப் போன பொழுதில் - அழிந்து சிந்தும் படியாக (நான் அங்கு போருக்குச்) சென்ற காலத்தில்; என் சிலையின் பொங்கி - எனது வில்லில் இருந்து மிகுதியாக வெளிப்பட்டு (வந்த அம்புகள்); உரங்களில் - (தன்னுடைய) |
|
|
|