பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 403

மார்பிலும்;    முதுகில் - முதுகிலும்;  தோளில் - தோளிலும்;  உறை
உறுசிறையில்
 -  போர்வையாகப்  பொருந்திய  இறகுகளிலும்;  உற்ற
சரங்களும்   நிற்கவே   கொல்
 -  தைத்த  அம்புகளும்  இன்னும்
நிலைத்துத்  தைத்திருக்கும் நிலையில் கூடவா?; அவ் அருணன் தம்பி
வந்தது
 -  அந்த அருணனுடைய தம்பியாகிய கருடன் (பகைவருக்கு
உதவ) வந்தது.
 
 

சிலை  - வில், உரம் - மார்பு, உறையுறு சிறை - மேற்போர்வையாக
இறகுகளை    உடைய   சிறகு.   அருணன்   காசியப   முனிவர்க்கு
வினதையிடம்   பிறந்தவன்.  அவனுடைய  இடுப்புக்குக்  கீழ்  உடல்
உறுப்புகள் இல்லாதவன். சூரியன் சாரதி. இங்குக் கருடனை ‘அருணன்
தம்பி’ எனக் குறிப்பிட்டது இகழ்ச்சி பற்றி.
 

                                                (298)
 

                    இராவணன் இந்திரசித்தனைப் போரிடக் கூறல்
 

8300.‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக!
                                          எஞ்சி
மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;
காண்டலும், நாணும்’ என்றான்; மைந்தனும் கருத்தைச்
                                       சொன்னான்;
 

ஈண்டு அது கிடக்க - இப்பொழுது அது கிடக்கட்டும்; மேன் மேல்
இயைந்தவாறு  இயைக
-  இனிமேல்   நடப்பது  நடக்கட்டும்; எஞ்சி
மீண்டவர்
 -  (இப்போது)    (நாகக்   கணைக்குத்)    தப்பி  (உயிர்)
பிழைத்தவர்கள்;  தம்மைக்   கொல்லும்  -  தம்மைக்   கொல்லுகிற;
வேட்கையே  வேட்கும்  அன்றே -  விருப்பத்தையே விரும்புவோம்
அல்லவா?  ஆண்தகை   -    (அதனால்)    ஆண்மைப்  பண்புகள்
நிறைந்தவனே;  அருமைப்  போர்கள்  -  அருமையான போர்களை;
இன்னும் நீயே ஆற்றுதி - மேலும் நீயே சென்று செய்க; காண்டலும்
நாணும்   என்றான்
  -  (அவ்வாறு  போர் செய்து  நீ  அவர்களை
அழிப்பதைக்)   கண்டபொழுது  (அவர்கள்  தப்பிப் பிழைக்க உதவிய
கருடன்)   நாணங்கொள்ளுவான்   என்று   (இராவணன்)  கூறினான்.
மைந்தனும்   -  அதற்கு  மகனாகிய  (இந்திரசித்தனும்);  கருத்தைச்
சொன்னான்
- (தன்) மனக் கருத்தை (இராவணனிடம்) சொன்னான்.
 

                                               (299)