பொறாத தூதர் - போர்க்களத்தில் இந்திரசித்தனைத் தனியே விட்டு விட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடிப்போய் விட்டுத் தற்போது எம்மைப் போருக்கு அனுப்புக என்று கேட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தூதர் என்க. மற்று - வினைமுற்று. |
(2) |
8304. | ‘ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித் தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார், “மானவன் வாளி, வாளி! என்கின்ற மழலை வாயார், போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்! என்றார். |
ஆனையும் - யானைகளும்; பரியும் - குதிரைகளும்; தேரும் - தேர்ப்படைகளும்; அரக்கரும் - காலாட் படை வீரர்களாகிய அரக்கர்களும்; அமைந்த - (ஒன்றாகச் சேர்ந்து) (நால்வகைப் படையாக) அமைந்த; ஆழித்தானைகள் வீய - கடல் போன்ற படைகள் அழிவுற்றதனால்; தனிமை நின்ற தலைமகன் - தன்னந் தனியனாய்ப் (போர்க்களத்தில்) நின்ற தலைவனாகிய இந்திரசித்தனது; தனிமை ஓரார் - தனிமையைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பாராமல்; மானவன் வாளி வாளி என்ற - மனிதனாகிய இலக்குவனுடைய அம்புகள் அம்புகள் என்கின்ற; மழலை வாயார் - குழறிச் சொல்லும் சொற்களைக் கொண்ட வாயினை உடையவர்களாய்; போனவர் - போர்க்களத்தை விட்டு ஓடிப் போனவர்கள்; மீளவந்து - மீண்டும் வந்து; புகுந்தனர் போலும் என்றார் - (தங்கள் வீரத்தை வெளிக்காட்ட) புகுந்துள்ளார் போலும் என்றனர். (தூதுவர்) |
(3) |
கலி விருத்தம் |
8305. | அற்று அவர் கூறலும், ஆர் அழலிற்றாய் முற்றிய கோபம் முருங்க முனிந்தான்,- ‘இற்றிதுவோ இவர் சேவகம்?’ என்னா, ‘பற்றுமின்!’ என்றனன்-வெம்மை பயின்றான். |
அவர் - அந்தத் தூதுவர்கள்; அற்று கூறலும் - அவ்வாறு ஆன சொற்களைச் சொன்ன அளவிலே; வெம்மை பயின்றான் - கொடுஞ் (செயல்களைச் செய்வதிலேயே) பயின்றவன் ஆகிய இராவணன்; ஆர் அழலிற்றாய் - நிறைந்த தீயின் தன்மைத்தாய; |