பக்கம் எண் :

408யுத்த காண்டம் 

முற்றிய  கோபம் - முதிர்ந்த சினம்; முருங்க  முனிந்தான் -  (தன்
தன்மையை   அழித்தலால்)  மிகச்  சினந்தவனாகி; இவர்   சேவகம்
இற்றிதுவோ  என்னா
 - இவர்கள் (என் மனனுக்குச் செய்த) சேவகம்
இவ்வகைப்பட்டதோ    என்று   கூறி;   பற்றுமின்   என்றனன்  -
(இவர்களைப்) பிடியுங்கள் என்றான்.
 
 

                                                 (4)
 

8306.என்றலும், எய்தினர், கி்ங்கரர் என்பார்,
பின்றலினோரை வலிந்து பிடித்தார்,
நின்றனர்; ஆயிடை, நீல நிறத்தான்,
‘கொன்றிடுவீர் அலிர்; கொண்மின், இது’ என்றான்.
 

என்றலும் - என்று (இராவணன்) கூறிய உடனே; கிங்கரர் என்பார்
-  கி்ங்கரர்  என்ற  பெயர்  உடையவர்கள்;  எய்தினர்  -  நெருங்கி;
பின்றலினோரை    -    (போர்க்களத்தில்    இருந்து)    பின்னிட்டு
ஓடிவந்தவர்களான;   (மாபக்கனையும்   புகைநிறக்     கண்ணனையும்)
வலிந்து  பிடித்தார்   -   இறுகப்  பிடித்துக்கொண்டு; நின்றனர்  -
நின்றார்கள்; ஆயிடை  - அப்பொழுது; நீல நிறத்தான் - கரிய நிறம்
உள்ள  இராவணன்;  கொன்றிடுவீர் அலீர் - (இவர்களைக்) கொன்று
விடவேண்டாம்;   இது  -  (நான்  சொல்லப்போகிற   இச்செய்தியை);
கொண்மின்  என்றான்  - மனத்தில்  நிலை  நிறுத்திக்கொள்ளுங்கள்
என்றான்.
 
 

                                                  (5)
 

8307.‘ஏற்றம் இனிச் செயல் வேறு இலை; ஈர்வீர்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
கோல் தரு திண் பணை கொட்டினிர், கொண்டு, ஊர்
சாற்றுமின், “அஞ்சினர்” என்று உரைதந்தே,’
 

நாற்றம்  நுகர்ந்து உயர் நாசியை - மணத்தை நுகர்ந்து கொண்டு
உயர்ந்து  விளங்கித்  தோன்றுகிற  மூக்கினை;  ஈர்வீர்  -  (முதலில்)
அறுப்பீர்கள்;  (பிறகு) ஊர் - ஊர் முழுதும் கூட்டிக்  கொண்டுபோய்);
நாமக்கோல்  தரு  திண்பணை கொட்டினிர் கொண்டு  -  சிறந்த
குறுந்தடியால்  அடிக்கப்படுகிற  வலிய பறையைக் கொட்டிக் கொண்டு;
அஞ்சினர்  என்று  உரை  தந்தே - (இவர்கள்  போருக்கு) அஞ்சி
(ஓடிவந்தவர்கள்)   என்ற   சொற்களைச்   சொல்லி;  சாற்றுமின்  -
(அனைவருக்கும்) சொல்லுங்கள்; ஏற்றம் இனிச் செயல் வேறு இலை
- இவர்களுக்குச் செய்கிற உயர்வான