பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 409

செயல்  இதைத்தவிர  வேறு  எதுவும்   இல்லை   (என்று  இராவணன்
கிங்கரர்களிடம் கூறினான்).

இச்செயல்   பிற   அரக்க   வீரர்களுக்கு  ஓர்   எச்சரிக்கையாயும்
அச்சுறுத்தலாயும் அமைந்த செயல் எனக்கொள்க.

                                                  (6)

8308.அக் கணனே, அயில் வாளினர் நேரா,
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்,
புக்கனர்; அப் பொழுதில், ‘புகழ் தக்கோய்!
தக்கிலது’ என்றனன், மாலி, தடுத்தான்.

அக்  கணனே  -   (அவ்வாறு  இராவணன்  கட்டளை  இட்ட)
அப்பொழுதே; அயில்வாளினர்  -  கூர்மையான  வாளினை உடைய
(கிங்கரர்கள்); நேரா - (அக்கட்டளைககு) உடன்பட்டு நேர்ந்து; மிக்கு
உயர்    நாசியை
 -    (மாபக்கன்    புகை    நிறக்   கண்ணன்
ஆகியவர்களுடைய)   மேல்   நோக்கி   உயர்ந்த   மூக்கினை;  ஈர
விரைந்தார்  புக்கனர்
- அறுப்பதற்காக  விரைந்து வந்து புகுந்தனர்;
அப்பொழுதில் -  அப்பொழுது; மாலி  -  மாலி  என்னும் அரக்கப்
படைத்தலைவன்  (இராவணனை நோக்கி); புகழ்தக்கோய் - புகழுக்குத்
தகுதியானனே;  தக்கிலது   என்றனன்   தடுத்தான்  -  இச்செயல்
தகுதிக்குரியதன்று என்று கூறித் தடுத்தான்.

                                                 (7)

8309.‘அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார்,
வெஞ் சமம் வேறலும், வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே?
தஞ்சு என ஆர் உளர், ஆண்மை தகைந்தார்?

அம்சமம்  - அழகிய போரில்; அஞ்சி  அழிந்துளர்  ஆனார்  -
அஞ்சி  (மனம்  அழிந்தவர்களானவர்கள்;  வெஞ்சமம்   வேறலும்  -
(பிறிதொரு) கொடிய  போரில்  வெல்லுதலும்; வென்றியது  இன்றாய்த்
துஞ்சலும்
 -  வெற்றி  இல்லாமல்  இறந்து படுதலும்; என்று  இவை -
என்ற  இவ்வகைச்செயல்கள்;  தொல்லைய  அன்றே  -   பழமையான
முறையில்  வருபவை  அல்லவா? ஆண்மை தஞ்சு என தகைந்தார் -
ஆண்மைப்     பண்பைத்     தன்னிடத்திலேயே     அடைக்கலமாக
(நிலையாகக்) கொண்டவர்கள்; ஆர் உளர் - (இந்த உலகத்தில்) யாவர்
உளர் ஒருவருமில்லை என்றபடி.