பக்கம் எண் :

410யுத்த காண்டம் 

இதன்மூலம்   போரில்   எதுவும்  நடக்க  வாய்ப்பு  உள்ளது  என்ற
கருத்து உயைவன் மாலி எனலாம். உலக இயற்கையும் அதுதானே?
 

                                                 (8)
 

8310.‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
வந்தன நம்வயின் எத்தனை, மன்னா!
தந்திரம், வானவர் தானவர் என்னும்,
இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே!
 

மன்னா - மன்னனே; அந்தரம் ஒன்றும்  அறிந்திலை அன்றே -
(நீ) வேறுபாடு எதையும்  ஒரு  சிறிதம்  அறிந்திருக்கவில்லை அல்லவா?
வானவர்  -  தேவர்கள்; தானவர் - தானவர்கள்; என்னும் தந்திரம் -
என்கிற  படைகள்;  நம் வயின்வந்தன எத்தனை - நம்முடன் போரிட
வந்தவைகள்  எத்தனையோ  அல்லவா?  (அவையெல்லாம்  நம்மிடம்
தோற்றுப்போய்  விடவில்லையா?)  இந்திரன்  அஞ்சினான்  - தேவர்
தலைவனாகிய  இந்திரன்  (கூடப்) போருக்கு அஞ்சினானே! எண்ணுதி
அன்றே
- (அதை நீ) எண்ணிப் பார்க்கலாமல்லவா?
 

                                                  (9)
 

8311.‘வருணன் நடுங்கினன், வந்து வணங்கிக்
கருணை பெறும் துணையும், உயிர் கால்வான்;
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்!
பருணிதர் தண்டம் இது அன்று, பகர்ந்தால்.
 

எந்தாய்  -  எமது  தந்தையே;   வருணன்  வந்து  வணங்கி  -
(உன்னுடைய   ஆற்றலுக்கு   அஞ்சித்   தோற்ற)   வருணன்   (வந்து
உன்னை)  வணங்கி  நின்று;  கருணை  பெறும்  துணையும் -  (உன்)
அருள்  பெறும் கால அளவும்; உயிர் கால்வான் நடுங்கினான் - பெரு
மூச்சு  விட்டுக்கொண்டு  நடுங்கி   நின்றான்  (என்றால்);  இருள்  நிற
வஞ்சகர்  எங்கு உளர்?
- இருட்டின் நிறம் உள்ள வஞ்சனைப் பண்பு
நிறைந்த  இவர்கள்  எங்கே  இருப்பர்  (வருணனே  அஞ்சி நிற்கையில்
இவர்கள்    உயிருக்கு    அஞ்சி   ஓடிவந்தது  பெரும்  பிழையிலை);
பகர்ந்தால் -  எடுத்துச்  சொன்னால்;   இது  - (நீ கொடுத்த) இந்தத்
தண்டனை;  பருணிதர்   தண்டம்  அன்று  -  அறிவு  உடையோர்
கொடுக்கும் தண்டனை அன்று.