பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 411

வருணனே  உன்னிடத்தில் திக்கு விசயத்தில் நிற்கும்போது இவர்கள்
எம்மாத்திரம்  என்று மாலி கூறுகிறான். இராமனிடம் வருணன் அஞ்சி
நடுங்கியது குறித்ததாகவும் கொள்ளலாம்.
 

                                                (10)
 

8312.‘பத்து-ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர், உய்ந்தார்;
வித்தக! யார் இனி வீரம் விளைப்பார்?
 

வித்தக  - வித்தகனே!  பத்து ஒரு நாலு - நாற்பது வெள்ளமாகப்;
பகுத்த பரப்பின் - பிரிந்த பரப்பினை உடைய; அத்தனை வெள்ளம்
அரக்கர்  அவிந்தார்
 - அத்தனை வெள்ளம் அரக்கப் படை வீரரும்
(இலக்குவன் கணைகளாலும்  வானரப் படையினராலும்) போரில் இறந்து
ஒழிந்தனர்;  ஒரு   மூவர்  -  இந்திரசித்தன்,  புகைநிறக்   கண்ணன்
மாபக்கன்  என்ற  மூவர்; ஒத்து  உய்ந்தார் பிழைத்தனர் - ஒன்றாக
(உயிர்)  தப்பியவர்களாகிப்  பிழைத்தார்கள்;  இனியார்  -  இனிமேல்
யாவர்?  வீரம்  விளைப்பார்  -  (இவர்களைப்  போல்) வீரச் செயல்
செய்யவல்லராவர்?
 
 

                                                (11)
 

8313.‘பாசமும் இற்றது; பாதியின் மேலும்
நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா,
நீசரை ஈருதியோ, நெடு நாசி?
 

நம்பி  -  ஆடவரில்  சிறந்தவனே;  பாசமும்  இற்றது - (இந்திர
சித்தனது)  நாகக்   கணையும்  வலி  இழந்து  இற்றுப் போய் விட்டது;
பாதியின் மேலும் நாசமும் உற்றது - (அரக்கப் படை) பாதிக்கு மேல்
(போரில்)  அழிந்து  போய்  விட்டது; நடந்தாய் - (நீயும்) முதல் நாள்
போருக்குச் சென்று விட்டுத்) திரும்பி வந்துவிட்டாய்; பூசல் முகத்து -
போர்  முகத்தில்; ஒருகான்முளை போதா - ஒப்பற்ற (உன்) மகனுடன்
(இறுதி  வரை  உடன்நின்று)  போகாத;  நீசரை - (எளிமைத் தன்மை
உடைய)  நீசர்களாகிய  இந்தப்  பணியாளருடைய; நெடுநாசி - நீண்ட
மூக்கினை; ஈருதியோ - அறுக்கக்கடவாயோ?
 
 

                                                (12)
 

8314.‘”வாழி இலக்குவன்” என்ன, மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்;