பக்கம் எண் :

412யுத்த காண்டம் 

ஏழ கடல் துணையோ? இனி, நாசி
ஊழி அறுத்திடினும், உலவாதால்.

வாழி   இலக்குவன்  என்ன  -  இலக்குவன்   என்று   (பெயர்)
சொன்னாலும்;  மறுக்குற்று - மனக்கலக்கம் அடைந்து; ஆழி  அரக்கர்
தம்  வாயில்  அடைப்பார்
 -  கடல் (நீர்) வாயிலை அடைப்பார்கள்;
இனிநாசி   -   (அவர்கள்   எல்லோருடைய   மூக்கையும்   அறுக்க
முற்பட்டால்)  இனி  மூக்கின்  தொகுதி; ஏழு கடல் துணையோ - ஏழு
கடலின்   அளவு  மாத்திரம்  இருக்குமோ;  ஊழி  அறுத்திடினும்  -
(அப்படி     அறுத்தலைத்    தொடங்கினால்)    ஊழிக்காலம்   வரை
அறுத்தாலும்; உலவாதால் - முடியாததாகும்,

வாழி - அசை. ஆழி அரக்கர் - உவமைத்தொகை

                                                (13)

8315.தூது நடந்தவனைத் தொழுது, அந் நாள்,
ஓது நெடுஞ் செரு அஞ்சி உடைந்தார்,
தீது இலர் நின்றவர், சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர், நாசி படைத்தார்!

ஓது  நெடுஞ் செரு அஞ்சி - சிறப்பித்துச் சொல்லப்படுகிற பெரிய
போருக்கு  அஞ்சி;  அந்நாள்  -  அந்த நாளில்; தூது நடந்தவனைத்
தொழுது
 -  தூதுவனாக  வந்த அனுமனைத் தொழுது; உடைந்தார் -
தோற்றுப்   போனவர்களாய்  (இருந்தும்);  தீது  இலர்  நின்றிவர்  -
(தண்டனை என்னும்) தீது  இல்லாதவராய்  நின்றவர்கள்; சேனையின் -
(நம்)  அரக்கர்  படையில்;  பாதியின்  மேலுளர்  -  பாதிக்கு  மேல்
உள்ளவர்கள்;  நாசி  படைத்தார்  உள்ளார் - மூக்கு உள்ளவர்களாய்
உள்ளார்கள்.

                                                 (14)

8316.‘விட்டிலை சீதையை ஆம்எனின், வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர், ஓடார்?
“வெட்டுதி நாசியை, வெந் தொழில் வல்லோர்
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான்.

சீதையை  விட்டிலை  ஆம்  எனின்  -  (நீ)  சீதையை  விட்டு
விடவில்லை  ஆனால் வீரர் ஒட்டிய போரினில் - வீரர்கள் நெருங்கிச்
செய்யும்  போரில்;  ஓடார்  ஆர்  உளர்  -  (அஞ்சி) ஓடாத அரக்க
வீரர்கள்   யார்   இருக்கப்  போகிறார்கள்; வெந்தொழில்  வல்லோர்
பட்டிலர்
- கொடிய போர்த்தொழில் வல்ல (இராம இலக்குவர்)