பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 415

அன்னவர்   தம்மொடும் - (அந்த மாபக்கன் புகைநிறக் கண்ணன்)
தம்முடன்   (இராவணன்);   மின்னு  படைக்கை  -  ஒளி  விடுகின்ற
படைக்கலங்களைக்  கையில்  கொண்ட;  ஐ  இரு  வெள்ளம் - பத்து
வெள்ளம்;  அரக்கரை  விட்டான் - அரக்க வீரர்களை அனுப்பினான்;
சொன்ன   தொகைக்கு   அமையானை    -   முன்னால்   கூறிய
காலட்படைக்கு)   (உரிமையாக)   அமைந்த  யானைப்  படைகளையும்;
சுடர்த்தேர்  -  ஒளியைக்  கொண்ட  தேர்ப் படையினையும்; துன்னு
வயப்பரியோடு
 -  நெருங்கிய  வலிமையான குதிரைப் படைகளையும்;
தொகுத்தான் - சேர்த்து அனுப்பினான்.
 
 

                                               (20)
 

8322.நெய் அழல் வேள்வி நேடும் பகை, நேர் விண்
தைவரு சூரியசத்துரு என்பான்,
பெய் கழல் மாலி, பிசாசன் எனும் பேர்
வெய்யவன், வச்சிரம் வென்ற எயிற்றான்.
 

நெய்  அழல்  வேள்வி  நெடும்பகை - நெய்  பெய்து  செய்யும்
வேள்விக்கு  பெரிய   பகைவன்;  (வேள்வியின்  பகைஞன்) நேர்விண்
தைவரு  சூரிய சத்துரு என்பான்
- நேராக வானத்தில் பவனி வருகிற
சூரியன்   பகைஞன்  என்பவன்;  கழல் பெய் மாலி - கழல் அணிந்த
மாலி;  பிசாசன்  எனும் பேர் வெய்யவன் - பிசாசன் என்னும் பெயர்
உடைய  கொடியவன்;  வச்சிரம்  வென்ற  எயிற்றான் - வச்சிரத்தை
வென்ற (வலிய) பற்களை உடையவன் (வச்சிரத்து எயிற்றவன்).
 
 

                                                (21)
 

8323.என்றவரோடும் எழுந்து, உலகு ஏழும்
வென்றவன் ஏவலின், முன்னம் விரைந்தார்,
சென்றன, மால் கரி, தேர், பரி; செல்லக்
குன்றுஇனம் என்ன நடந்தனர், கோட்பால்.
 

என்றவரோடும்    -   என்ற   பெயர்    கொண்ட    அரக்கத்
தலைவர்களுடன்;   எழுந்து  -  (மாபக்கனும்  புகைநிறக்  கண்ணனும்
சேர்ந்து)  எழுந்து;  உலகு  ஏழும் வென்றவன்  - உலகு ஏழனையும்
வென்றவனாகிய  (இராவணன்);  ஏவலின்  - கட்டளைப்படி; சென்றன
மால்கரி
 - சென்றனவாகிய மத மயக்கம் கொண்ட யானைகள்; தேர் -
தேர்;  பரி  -  குதிரை; செல்ல - என்பவைகள் செல்ல; குன்று இனம்
என்ன நடந்தனர்
- மலைகளின் கூட்டம்