| கார் இகலிக் கடலோடு கலித்த; மாரி கலித்தென, வாசி கலித்த. |
பேர் உலகைச் சூழ் - பெரிய உலகத்தைச் சூழ்ந்துள்ள; ஏரி கலித்தன ஆம் என - கடல்கள் ஒலித்தனவாம் எனும் படியாக; பேரி கலித்தன - பேரிகைகள் ஒலித்தன; யானை கார் இகலிக் - யானைகள் மேகங்களின் (இடி ஒலியோடு) மாறுகொண்டு; கடலோடு கலித்த - கடல் ஒலிபோல் ஒலித்தன; மாரி கலித்தென - மழை ஒலித்தது என்னும் படி; வாசி கலித்த - குதிரைகள் ஒலித்தன. |
(25) |
| 8327. | சென்றன சென்ற சுவட்டொடு செல்லா நின்று பிணங்கிய, கல்வியின் நில்லா, ஒன்றினை ஒன்று தொடர்ந்தன, ஓடைக் குன்று நடந்தனபோல்-கொலை யானை. |
கொலையானை - கொல்லும் தன்மை உள்ள யானைகள்; சென்றன சென்ற சுவட்டொடு செல்லா - சென்றனவாகிய (படைகள்) சென்ற அடிச்சுவட்டினில் செல்லாமல்; நின்று பிணங்கிய - நின்ற இடத்திலேயே நின்று மாறுபாடு கொண்டனவும்; கல்வியின் நில்லா - (பாகர்களின்) சொல்லுக்கு (அடங்கி) நிற்காதனவும் ஆகி; ஓடைக்குன்று நடந்தன போல் - முகபடாம் அணிந்த மலைகள் நடந்தன போல; ஒன்றினை ஒன்று தொடர்ந்தன - ஒன்றினை ஒன்று தொடர்ந்து சென்றன. |
(26) |
| 8328. | மாக நெடுங் கரம் வானின் வழங்கா, மேக நெடும் புனல் வாரின, மேன்மேல், போக விலங்கின, உண்டன போலாம்- காக நெடுங் களி யானை களிப்பால். |
காக நெடுங்களி யானை - காகங்கள் சூழ்ந்துவரும் பெரிய மதம் கொண்ட யானைகள்; களிப்பால் - மத மயக்கத்தால்; நெடுங்கரம் - (தங்களது) நீண்ட துதிக்கையை; மாகவானின் - உயர்ந்த வானத்தில்; வழங்கா - செலுத்தி; மேக நெடும் புனல் வாரின - மேகங்களில் உள்ள மிகுதியான நீரினை வாரி முகந்து; மேன்மேல் போக விலங்கின - மேன்மேல் போதலைத் |