தவிர்த்தனவாய்; உண்டன போலாம் - (அந்த நீரினை) உண்பனவாயின. |
(27) |
| 8329. | எரிந்து எழு பல் படையின் ஒளி, யாணர் அருங் கல மின் ஒளி, தேர் பரி யானை பொருந்திய பண் ஒளி, தார் ஒளி, பொங்க, இரிந்து பேர் இருள், எண் திசைதோறும். |
எரிந்து எழு பல்படையின் ஒளி - ஒளிர்ந்து எழுகின்ற பல்வகைப் படைக்கலங்களின் ஒளி; யாணர் அருங்கல மின்ஒளி - புதியதாக (வீரர்கள் அணிந்து உள்ள) அரிய அணிகலன்களின் மின்னுகின்ற ஒளி; தேர் பரி யானை - தேர், குதிரை, யானை; பொருந்திய பண் ஒளி - (ஆகியவற்றுக்குச் செய்து) அமைத்த அலங்காரப் (பொருள்களின்) ஒளி; தார் ஒளி - பொன் மாலைகளின் ஒளி; பொங்க - (ஆகியவை எங்கும்) மிகுதியாக இருப்பதனால்; எண்திசை தோறும் - எட்டுத் திசைகள் தோறும்; (செறிந்திருந்த) பேர் இருள் இரிந்தது - மிக்க இருள் (கெட்டு) ஓடியது. |
(28) |
வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல் |
| 8330. | எந்திய சேனையை, ஈசன் எதிர்ந்தான், ‘வெய்து இவண் வந்தவன், மாயையின் வெற்றி செய்தவனேகொல்? தெரித்தி இது’ என்றான்; ஐயம் இல் வீடணன் அன்னது உரைத்தான்: |
ஈசன் - (அனைத்துயிர்க்கும் உலகங்களுக்கும் தலைவனாகிய) இராமன்; எய்திய சேனையை எதிர்ந்தான் - (போர்க்களம்) வந்து அடைந்த (அரக்கர்) படையை எதிர்கொண்டு கண்டு; வெய்து இவண் வந்தவன் - மிகுசினம் கொண்டு இவ்விடத்துக்கு வந்தவன்; மாயையின் - மாயையால்; வெற்றி செய்தவனே கொல் - வெற்றியை உண்டாக்கிக் கொண்ட இந்திரசித்தன் தானோ? இது தெரித்தி என்றான் - இதனைத் தெரிவிப்பாய் என்று கேட்டான்; ஐயம் இல்வீடணன் - (வந்தவன் யாவன் என்பதை) ஐயம் இல்லாமல் உணர்ந்தவன் ஆகிய வீடணன்; அன்னது உரைத்தான் - அது பற்றிச் சொன்னான். |
(29) |