பக்கம் எண் :

434யுத்த காண்டம் 

எயிற்று     -  வருத்தும்  தன்மை    கொண்ட      வெண்மையான
பற்களையும்;  அரக்கியர்  -  உடைய  அரக்கியர்கள்;  களத்து வந்து
அடைந்தார்
 -  போர்க்களத்துக்கு  வந்து அடைந்தவர்களாகி; குணம்
கொளும்
 -  (தங்களிடம்) அன்பு எனும் பண்பு கொண்டிருந்த; தம் -
தங்களுடைய;   துணைக்கணவர்
 -  துணையாகிய  கணவர்களுடைய;
பசுந்தலை கொடாது - பசுந்தலையை உண்பதற்காகக் கையில் கொண்டு
கொடுக்காமல்;  பிணங்கு  பேய்களின்  -  மாறுபடுகின்ற  பேய்களின்;
வாய்களைப்   பிடித்தே  பிளந்தனர்   -   வாய்களைப்   பிடித்துப்
பிளந்தனர்.
 

                                                  (61)
 

8363.சுடரும் வெள் வளைத் தோளி,  தன்கொழுநனைத்
                                     தொடர்வாள்,

உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள்
குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள,

தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள்.
 

சுடரும்    வெள்  வளைத்தோளி  - ஒளி  விடுகிற  வெள்ளிய
வளையல்களை   அணிந்த  தோள்களை  உடையாள்  ஒருத்தி;  தன்
கொழுநனைத்  தொடர்வாள்
 -  தன்  கணவனைப் (போர்க்களத்தில்
தேடித்)  தொடர்ந்து சென்றவள்; உடரும் அங்கமும் கண்டு - (அங்கு
அவனது) உடலினையும் (கை, கால் முதலிய) உறுப்புகளையும்   பார்த்து;
கொண்டு ஒருவழி உய்ப்பார் -(அவற்றை எல்லாம் திரட்டிக்) கொண்டு
(வந்து) ஓரிடத்தில் சேர்ப்பவள்; ஓர் குறு நரி - ஒருசிறிய நரி; குடரும்
ஈரலும்  கண்ணும்  கொள்ள
 - குடலையும், ஈரலையும், கண்ணையும்
தூக்கிச்  செல்ல; தொடர ஆற்றலள் - அதனைத் தொடர்ந்து செல்லும்
வலிமை  அற்றவளாகி;  நெடிது  உயிர்த்து  - பெருமூச்சு விட்டு; ஆர்
உயிர் துறந்தாள்
- தனது அரிய உயிரை விட்டாள்.
 

                                                  (62)
 

8364.பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா