பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 435

 

இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த
அரிய,, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார்.
 
 

பெரிய  வாள் தடங்கண்ணியர் - நீண்ட வாள் போன்ற கண்களை
உடைய  மகளிர்;  தம்  கணவர்  தம்  -  தங்கள்  கணவர்களுடைய;
பெருந்தோள் நரிகள் ஈர்த்தன - பெரிய தோள்களை நரிகள் இழுத்துச்
சென்றனவாக;   வணங்கவும்   -   (அவை)   வணங்கிக்   கேட்கும்;
இணங்கவும்  -  இணக்கமாகக்  கேட்டும்; நல்கா - (அத்தோள்களைக்)
கொடுக்காமல்;  இரியல்  போவன தொடர்ந்து - ஓடுகின்ற அவற்றைத்
தொடர்ந்து  (போய்);  அயல்  கிடந்த  இனப்படை அரிய - அருகில்
விழுந்து   கிடந்த   தொகுதியாய்  உள்ள  படைக்கலங்கள்    (தங்கள்
கால்களை)   அறுத்திட;  அலத்தகச்  சீறடி  -  செம்பஞ்சுக்  குழம்பு
ஊட்டிய  சிறிய  அடிகள்; நொந்திலர் அயர்ந்தார் - ஓடி வருந்தாராய்
அயர்ந்து நின்றனர்.
 

                                                 (63)
 

8365.நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலார்,
அலங்கல் ஓதியர்,-அருந் துணை பிரிந்து நின்று அயரும்,
பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன
                                       போன்றார்.

 

தம்     துணைக் கணவரை நாடி - தங்களுக்குத்  துணைவனாய்
அமைந்த கணவரைத் தேடி; விலங்கல் அன்ன - மலையைப்  போன்று;
வான்  பெருங் குப்பையின்  மேலார்  -  உயர்ந்த பிணக் குவியலின்
மேலேறி  நின்றவர்களான;  அலங்கல்  ஓதியர் - மாலையை அணிந்த
கூந்தலையும்;  நலம்  கொள்  நெஞ்சினர்  -  நன்மையை (விரும்பிக்)
கொண்ட  நெஞ்சினையும்  (உடைய  அரக்க  மகளிர்);   அருந்துணை
பிரிந்து
- (தம்) அருமையான துணையாகிய (ஆண் மயிலைப்)  பிரிந்து;
நின்று  அயரும்  -  நின்று  சோருகிற;  பொலம்  கொள்  -  அழகு
கொண்ட; மாமயில் - பெரிய (பெண்)