| படைத் தலைவர் வதைப் படலம் | 437 |
| துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல் கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார்.* | நவை செய் வன்தலை - குற்றம் செய்கிற வலிய தலைகளை; இழந்த - போரில் இழந்து விட்ட; தம் அன்பரை அணுகி - தங்களுடைய கணவன்மாரை நெருங்கி; உருத்தெரிந்து அறியார் - (அவர்களுடைய) உருவத்தை (அடையாளம்) தெரிந்து அறியாதவர்களாய்; அவசம் எய்திய மடந்தையர் - சலிப்பினை அடைந்த பெண்டிர் (எண்ணிப் பார்த்த பின்பு); கவசம் நீக்கினர் - (அவர்களுடைய உடல்) கவசத்தை நீக்கி; துவசம் அன்ன - கொடியைப் போன்ற; தம் கூர் உகிர்ப் பெருங்குறி - தங்களுடைய கூர்மையான நகத்தால் செய்யப்பட்ட பெருங்குறி; தோள் மேல்கண்டு கண்டு - (அவர்களுடைய) தோளின் மீது இருப்பதைப் பார்த்துப் பார்த்து); ஆர் உயிர் கழிந்தார் - (தங்களது) அருமையான உயிர் நீங்கினார்கள். | (66) | 8368. | மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப் போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார், பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார்.* | மாரி ஆக்கிய கண்ணியர் - மழை (போல் கண்ணீர் வடித்து) ஆக்கிய கண்களை உடையவர்களான (அரக்க மகளிர்); தம் கணவர் - தங்கள் கணவன்மாருடைய; வயிரப் போர் யாக்கைகள் நாடி - வயிரம் (பாய்ந்த) போர் (செய்த) உடல்களைத் தேடி; அம் பொரு களம் புகுந்தார் - (அந்தப்) போர்க்களத்தின் கண் புகுந்தார்கள் (அவர்கள்); பேர் யாக்கையின் - பெரிய உடம்புகளை உடைய; பிணப் பெருங்குன்றிடை - பிணங்களாகிய பெரிய மலையில் இருந்து; பிறந்த - தோன்றிய; சோரி ஆற்றிடை அழுந்தினர் - குருதி ஆற்றின் இடையில் அழுந்தி; இன் உயிர் துறந்தார் - (தங்கள்) இனிய உயிரைத் துறந்தார்கள். | (67) |
|
|
|