பக்கம் எண் :

438யுத்த காண்டம் 

                            அனுமன் புகைநிறக்கண்ணன் போர்
 

கலி விருத்தம்
 

8369.வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்,
புகையின் பொரு கண்ணவனும் பொருவார்;
மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்.

 

வகை நின்று உயர்தாள்- அழகாக ஓங்கி நின்ற கால்களை உடைய;
நெடு  மாருதியும்  -  பெருமை உடைய அனுமனும்; புகையின் பொரு
கண்ணவனும்   பொருவார்
  -  புகையோடு  மாறுபடுகிற  கண்களை
உடையவனும்   போரிடுகின்றவர்களாகி;  சிகை  சென்று  நிரம்பிய  -
கொழுந்து   எழுந்து  சென்று  நிரம்புகிற;  தீ  உமிழ்வார்  -  தீயை
உமிழ்கின்றவர்களாகி;   மிகை  சென்றிலர்  -   (ஒருவருக்கு  ஒருவர்)
மேம்படுதல்   இன்றியும்;   பின்றிலர்   -    பின்னிடுதல்  இன்றியும்;
வென்றிலரால் - வெல்லுதல் இன்றியும் போர் செய்தனர்.
 

                                                 (68)
 

8370.ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன்,
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்,
வை அம் சிலை ஆறு வழங்கினனால்,
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான்.

 

அழற்கொடியோன்     - நெருப்பினும் கொடியவன் ஆகிய  புகை
நிறக்கண்ணன்;  மொய்  அஞ்சன  மேகம்  -  சொரிந்த  கரு மேகம்;
முனிந்தனையான்  -  சினந்ததனை  ஒப்பவனாகி; மெய் அஞ்சனை -
உண்மை  உள்ள  அஞ்சனையின்;  கான்முளை  மேனியின்  மேல் -
மகனாகிய  (அனுமனின்)  உடம்பின்  மீது;  வை  அம்சிலை ஆறு -
(தான்)  வைத்துள்ள  அழகிய வில்லின் வழியாக; ஐ - அஞ்சு அழல்
வாளி
  -   இருபத்து   ஐந்து   நெருப்புப்   போன்ற  அம்புகளை;
வழங்கினனால் - செலுத்தினான்.
 

                                                 (69)
 

8371.பாழிப் புயம் அம்பு உருவப் படலும்,
வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு,
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால்,-
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான்.