பாழிப்புயம் - (அனுமன்தன்) வலிமை உள்ள தோள்களில்; அம்பு உருவப்படலும் - அம்பானது உருவும் படியாகப்பட்ட உடனே; வீழிக்கனி போல் - வீழிக்கனியினைப் போல்; புனல் வீச - குருதி நீர் (அங்கிருந்து) வெளிப்பட; ஊழிப்பெயர் - உலக அழிவுக்காலத்தில் உலவுகிற; கார்நிகர் - மேகத்தைப் போன்று; ஒண் திறலான் - பெருவலி படைத்த அனுமன்; வெகுண்டு - சினம் மிகக் கொண்டு; ஆழிப்பெருந்தேரை - (அந்தப் புகை நிறக்கண்ணனுடைய) சக்கரத்தை உடைய பெரிய தேரை; அழித்தனனால் - அழித்தான். |
(70) |
8372. | சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான், வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்; புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான். |
சில்லி - சக்கரத்தை உடைய; பொருதேர் சிதைய - போர் செய்வதற்கு உரிய (தன்) தேர் அழிந்ததனால்; சிலையோடு - வில்லுடன்; எல்லின் பொலிவிண்ணின் - சூரியனால் அழகு பெற்று விளங்கும் ஆகாயத்தின் கண்; விசைத்து எழுவான் - வேகமாக எழுபவனாகிய; (புகை நிறக்கண்ணனுடைய) வில் - (கை) வில்; இலக்குவன் - இலக்குவன்; வெங்கணையால் - (எய்த) கொடிய அம்பினால்; இற்றது - அழிந்தது; நேர் பொருவான் - (அவனுடன்) நேரே போர் செய்பவன் ஆகிய (அனுமன்); புல்லித்தரை இட்டனன் - (அவனைத்) தழுவி (இழுத்துத்) தரையில் இட்டான்; |
(71) |
அனுமன் கொல்லுதல் |
8373. | மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு, உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து, அலையின், பருகிப் பரு வாய் அனல் கால் தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால். |
மலையின் பெரியான் - மலையினும் பெரிய உடலுடையவனான (புகை நிறக்கண்ணனுடைய); உடல் மண்ணிடை இட்டு - உடலை மண்ணில் போட்டு; கடல் தாவிய கால்கொடு - கடலைத் தாவிய தன் கால்களைக் கொண்டு; உலைய உதைத்து - (அழிந்து |