பக்கம் எண் :

440யுத்த காண்டம் 

உயிர்)     வற்றும்படியாக உதைத்து; பருவாய் அனல் கால்தலை -
பெரிய  வாயில்  தீயை  உமிழ்கின்ற தலையினை; கைக்கொடு பருகி -
(தன்)  கையைக் கொண்டு பறித்து; அலையின் எறிந்து - கடலின் கண்
எறிந்து; தணிந்தனனால் - சினமாறினான்.
 

                                                 (72)
 

                                  அங்கதன் மாபக்கன் போர்
 

8374.மாபக்கனும் அங்கதனும் மலைவார்,
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்,
கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார்,
தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால்.

 

மலைவார்     - போரிடுகின்றவர்களான; மாபக்கனும் - மாபக்கன்
என்பவனும்;  அங்கதனும் - அங்கதன் என்பவனும்; தீபத்தின் எரிந்து
எழு
 - விளக்கைப் போல் எரிந்து எழுகின்ற; செங்கணினார் - சிவந்த
கண்களை    உடையவர்களாய்;    கோபத்தினர்    -   சினத்தினை
உடையவர்களாய்;  தூபத்தின்  உயிர்ப்பர்  - தூபத்தைப் போல் புகை
வெளிப்படுகிற பெரு மூச்சினை உடையவர்களாகி; கொல்ல நினைந்து -
ஒருவரை    மற்றொருவர்    கொல்லுவதற்கு   எண்ணி;   அடர்வார்
தொடர்ந்தனரால்
- அழித்துக் கொல்லுவதற்காகத் தொடர்ந்தார்கள்;
 

                                                 (73)
 

8375.ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான்-
வெம்பி, களியோடு விளித்து எழு திண்
கம்பக் கரி, உண்டை கடாய் எனவே.

 

மொய்     தொழிலான் - நெருங்கி வந்து போர் செய்த மாபக்கன்;
வெம்பி  -  சினந்து;  கனியோடு  -  மது  மயக்கத்தோடு; விளித்து -
பேரொலி  செய்து;  எழு - எழுகின்ற; திண் கம்பக்கரி - வலிமையான
கட்டுத்தறியில்  கட்டப்பட்டிருந்த  யானை; உண்டை கடாய் எனவே -
மண்  உருண்டையை  விரைவாக  வீசியதைப்  போல்;  ஐம்பத்தொரு
வெங்கணை
  -  ஐம்பத்தொரு  கொடிய  அம்புகளை;  அங்கதன்  -
அங்கதனது;  மாமொய்ம்பில்  -  அகன்ற  வலிமை  உள்ள மார்பில்;
புகஉய்த்தனன் - புகும் படியாகச் செலுத்தினான்.
 

                                                 (74)