பக்கம் எண் :

442யுத்த காண்டம் 

8378.‘சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும்
காலம்’ என உன்னு கருத்தினனாய்;
ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர்
ஆலம் முக அம்பின் அறுத்தனனால்.

 

ஞாலம்   உடையான் - உலகங்கள் எல்லாம் தன் வடிவாக உடைய
(இராமன்); இது - இப்போது வருகின்ற சூலம்; சூலம் எனின் அன்று -
எளிமையான சூலமோ எனின் அன்று; தொல்லை வரும் காலம் என -
பழமையாக   வருகின்ற  காலபாசம்  என்று;  உன்னு -   நினைக்கிற;
கருத்தினனாய் - கருத்தினை உடையவனாய்; அது நாம் அற - அதன்
பெயர்  அழியும்படியாக;  ஓர் ஆலம் முக அம்பின் - ஒப்பற்ற நஞ்சு
தோய்ந்த   முனையினை  உடைய  அம்பினால்;  அறுத்தனனால்  -
அறுத்தான்.
 

                                                 (77)
 

8379.உளம்தான் நினையாதமுன், உற்று, உதவாக்
கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான்-உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான், ‘வலி நன்று’ என,-அங்கதனே.

 

அங்கதனே   - (அது கண்ட) அங்கதன்; ஏழினொடு ஏழு உலகு -
பதினான்கு   உலகங்களையும்;   பெயர்ந்து  அளந்தான்  -  (மூவடி)
பெயர்த்து    வைத்து    அளந்தவனாகிய   (திருமாலின்    அவதார
நாயகனாகிய)  இராமனின்;  வலி  நன்று என - வலிமை நன்று என்று
சொல்லி; உளம் தான் நினையாத முன் - மனத்தினால் நினைப்பதற்கு
முன்னமேயே;    உற்று   உதவாக்   கிளர்ந்தானை  -  நெருங்கிப்
போரிடக்கிளர்ந்து   எழுந்தவனாகிய  (மாபக்கனை);  இரண்டு  கிழித்
துணையாய்ப்
 -  இரண்டு  கிழியின்  தன்மையாகுமாறு; பிளந்தான் -
கிழித்தான்.
 

                                                 (78)
 

                                          நீலன் - மாலி போர்
 

8380.மா மாலியும் நீலனும், வானவர்தம்
கோமானொடு தானவர்கோன் இகலே
ஆமாறு, மலைந்தனர் என்று இமையோர்
பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால்.

 

மாமாலியும் - பெருமையில்  சிறந்த  மாலி  என்பவனும்; நீலனும் -
வானரப் படைத்தலைவனான நீலன் என்பவனும்;