பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 443

வானவர்     தம் கோமானொடு - தேவர் தலைவனாம் திருமாலின்
அவதாரமாகிய   நரசிங்கத்தோடு;   தானவர்   கோன்   -   தானவர்
தலைவனாகிய   இரணியன்;   இகலே   ஆமாறு  -  செய்த  போரே
ஒப்பாகுமாறு;  மலைந்தனர்  - போர் செய்தனர்; என்று இமையோர் -
என்று  கூறி விண்ணவர்கள்; பூ மாரி பொழிந்து - பூ மழை பொழிந்து;
புகழ்ந்தனரால் - புகழ்ந்தனர்.
 

                                                 (79)
 

8381.கல் ஒன்று கடாவிய காலை, அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்,
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்,
‘நில்!’ என்று இடை சென்று, நெருக்கினனால்.

 

கல்     ஒன்று கடாவிய காலை - (நீலன்) கல் ஒன்றை  எடுத்துச்
செலுத்திய   பொழுது;   அவன்   வில்   ஒன்று   -  (அது)  அந்த
மாலியினுடைய  வில்  ஒன்றை;  இருகூறின்  விழுந்திடலும் - இரண்டு
துண்டாக  விழுந்திடச்  செய்யவும்;  அல் ஒன்றிய வாளொடு - (மாலி)
ஒளி  நிறைந்தவாளுடன்;  தேரினன் ஆய் - தேர் மேல்  ஏறியவனாகி;
நில் என்று - (நீலனைப் பார்த்து) நில் என்று சொல்லி; இடை சென்று
- அவனிடத்தில் சென்று; நெருக்கினனால் - போரிடல்  ஆனான்.
 

                                                 (80)
 

8382.அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே,
மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா,
கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா,
எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால்.

 

அற்று     - அப்பொழுது; அத்தொழில் எய்தலும் -   அச்செயல்
நிகழும்  அளவில்; அக்கணனே - அக்கணமே; மற்றப்புறம் நின்றவன்
-  மற்றொரு  இடத்தில் நின்றவனாகிய; கொற்றக்குமுதன் - வெற்றியை
உடைய  குமுதன்  என்பவன்; ஒரு குன்று கொளா - ஒரு  குன்றினைக்
கையில்  கொண்டு; வந்து அணுகா - வந்து நெருங்கி; எற்ற -  அடிக்க;
பொருதேர்  - போரிடுவதற்குரிய (மாலியின்) தேர்; பொடி எய்தியதால்
- பொடியாகப் (போய்) விட்டது.
 

                                                 (81)
 

                        நீலன் - மாலி - இலக்குவன் செயல்கள
 

8383.தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து, வலித்து அடர்வான்