பக்கம் எண் :

444யுத்த காண்டம் 

தோள் ஆசு அற, வாளி துரந்தனனால்-
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.

 

நீலன்  - நீலன்; எறிந்ததனை - எறிந்ததாகிய; தாள் ஆர் மரம் -
அடி பெருத்த மரத்தை; வாளால் மடிவித்து - (தன்) வாளால்  அழித்து;
வலித்து    அடர்வான்   -   வலிமையோடு   பொருபவன்   ஆகிய
(மாலியினது);  தோள்  ஆசு  அற  - தோளின் மூட்டு  அறும்படியாக;
மீளா வினை  நூறும்  விடைக்கு  இளையான் - போக்குதற்கு அரிய
வினைகளைப்   போக்குபவனாகிய   இடபம்   போன்ற   இராமனுக்கு
இளையவனாகிய  இலக்குவன்;  வாளி  துரந்தனனால் -  அம்புகளைச்
செலுத்தினான்.
 

                                                 (82)
 

                                          இலக்குவன் செயல்
 

8384.மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை, சலியா,
‘என் போலியர் போர்எனின், நன்று; இது ஓர்
புன் போர்’ என, நின்று அயல் போயினனால்.

 

மின்போல்   மிளிர் வாளொடு - மின்னலைப்போல் விளங்குகின்ற
வாளுடன்;  தோள்  விழவும்  -  (தன்)  தோள்  அறுபட்டுக்  (கீழே)
விழவும்;  தன்  போர்  தவிராதவனை -  (தன்)  போரை  நீங்காமல்
செய்பவனாகிய  (மாலியைப்  பார்த்து  இலக்குவன்);  என்   போலியர்
போர் எனின் நன்று
- என் போன்றவருடன் செய்யும் போர்  என்றால்
அது  நல்லது;  இது  ஓர்  புன்போர் - இது ஒரு புன்மையான  போர்
ஆகும்; என சலியா - என்று (கூறி) வெறுத்து; நின்று - நின்று; அயல்
போயினனால்
- அப்பால் போயினன்.
 

ஒப்பாகாதவனுடன்     பொருதல் தகாது என இலக்குவன் அயல்
போயினன்  என்க.  ஒருவனோடு பலர் பொரும் போர் புன்போர் என
எண்ணி அயல் போயினன் எனினும் ஆம்.
 

                                                 (83)
 

                                 வானரப்படை வீரர் புகழ்ச்சி
 

8385.நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்,
பேர் வீரனை, வாசி பிடித்தவனை,