தெளிவு படுத்துதல் காண்க. இனி, இதில் முரண்பாடு இல்லை. முதல் பாடல் இறந்தான் எனக்கூற எவ்வாறு இறந்தான் என்பதை வரும் பாடல் கூறுவது பொருத்தமானதே என்பது மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. |
(85) |
8387. | மல்லல் தட மார்பன் வடிக் கணையால் எல்லுற்று உயர் வேள்விஇரும்பகைஞன் வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும் கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும். |
மல்லல் தட மார்பன் - வளப்பம் பொருந்திய பரந்த மார்பை உடைய (இலக்குவனது); வடிக்கணையால் - கூர்மையான அம்புகளால்; எல்லுற்று - ஒளி நிறைந்து; உயர் வேள்வி - உயர்கிற வேள்வித் தீக்கு; இரும் பகைஞன் - மிக்க பகைவனாகிய அவனுடைய; வில் அற்றது - வில் அழிந்திட்டது; கழுத்தொடு - கழுத்தும்; கால்களொடும் - கால்களும்; மேல் நிமிரும் தேரொடு - மேல் உயர்ந்து விண்ணில் செல்லும் தேருடன்; கல் அற்ற - கற்களும் அழிந்தன; |
இப்பாடல் அவன் இறந்தபடி கூறியது. தேரொடு மேல் நிமிரும் கல் அறுதல் - வேள்வியின் பகைஞன் வேள்வி நடத்தும் இடத்துக்குச் சென்று விண்ணில் தேரொடு நின்று கற்களை வீசி வேள்வியினை அழிப்பான். அவன் இறந்து பட்டமையால் இனி அச்செயல் நடை பெறாது என்பதை இப்பகுதி உணர்த்துகிறது. |
(86) |
சுக்கிரீவன் சூரியன் பகைஞனை அழித்தல் |
8388. | தன் தாதையை முன்பு தடுத்து, ஒருநாள், வென்றானை, விலங்கலின் மேனியனை, பின்றாத வலத்து உயர் பெற்றியனை, கொன்றான்-கவியின்குலம் ஆளுடையான். |
கவியின் குலம் ஆளுடையான் - வானரக் கூட்டங்களை ஆளடிமை கொண்ட சுக்கிரீவன்; முன்பு ஒரு நாள் - முன்பு ஒரு காலத்தில்; தன் தாதையை தடுத்து - தன் தந்தையாகிய சூரியனைத் தடுத்து; வென்றானை - வென்றவனும்; விலங்கலின் மேனியனை - மலை போன்ற உடம்பினை உடையவனும்; பின்றாத வயத்து உயர் பெற்றியனை - பின்னிடாத வெற்றியால் உயர்ந்தவனும் (ஆகிய சூரியன் பகைஞனை); கொன்றான் - கொன்றான். |
(87) |