பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 447

                          இடபன் - வச்சிரத்து எயிற்றன் போர்
 

8389.இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக்
கடவும் கதழ் தேர், கடவு ஆளினொடும்
பட,-அங்கு ஒரு குன்று படர்த்தினனால்.

 

இடபன்     - இடபன் என்ற பெயர் கொண்ட வானர வீரன்; தனி
வெஞ்சமம் உற்று
- ஒப்பற்ற வலிமையான போரைச் செய்ய  நெருங்கி;
எதிரும் - (தன்னை) எதிர்ப்பவனும்; விட வெங்கண் - நச்சுப் போன்ற
கொடிய  கண்களையும்;  எயிற்றவன்  - பற்களையும் உடையவனாகிய
வச்சிரத்து  எயிற்றவன்  உடைய;விண்  அதிரக் கடவும் கதழ்தேர் -
வானம்  அதிரும்படி  செலுத்தப்படுகிற  விரைவு பொருந்திய   தேரும்;
கடவு   ஆளினோடு   -  (அதைச்)  செலுத்துகிற  பாகனும்;  பட  -
அழியும்படி;   ஒரு   குன்று  -  ஒரு  குன்றினை;  படர்த்தினன்  -
செலுத்தினான். ஆல்- அசை.
 

                                                 (88)
 

                               வச்சிரத்து எயிற்றவன் செயல்
 

8390.திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன்
தண்டோடும் இழிந்து, தலத்தினன் ஆய்,
‘உண்டோ உயிர்?’ என்ன உருத்து, உருமோடு
எண் தோளனும் உட்கிட, எற்றினனால்.

 

திண்தேர் அழிய - (தன்) வலிமையான தேர் அழிந்ததனால்; சிலை
விட்டு
 -  (தன்  கையில்  இருந்த)  வில்லை  விட்டு  விட்டு;  (அந்த
வச்சிரத்து எயிற்றவன்)  ஒரு  தன்  தண்டோடும் இழிந்து - ஒப்பற்ற
(தன்னுடைய)   தண்டாயுதத்தோடு   (கீழ்) இறங்கி;    உருமோடு  -
இடியுடன்;   எண்   தோளனும்   -  எட்டுத் தோள்களை   உடைய
சிவபிரானும்; உட்கிட - அச்சப்படும் படியாக; உண்டோ உயிர் என்ன
-  (கண்டவர்  இனி இவனுக்கு) உண்டோ உயிர் என்று எண்ணும்  படி;
உருத்து - சினந்து; எற்றினன் - அடித்தான். ஆல் - அசை.
 

                                                (89)
 

                                          அனுமன் செயல்
 

8391.‘அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா,
இடியுண்ட மலைக் குவடு இற்றதுபோல்