பக்கம் எண் :

448யுத்த காண்டம் 

முடியும்’ எனும் எல்லையில் முந்தினனால்-
‘நெடியன், குறியன்’ எனும் நீர்மையினான்.

 

அடியுண்டவன் - அடிபட்டவன் ஆகிய இடபன்; ஆவி குலைந்து -
உயிர்  வாதனை  அடைந்து;  அயர்ந்து  -  துன்பப்பட்டு;  இடியுண்ட
மலைக்குவடு  இற்றது  போல்
 - இடியால் தாக்குண்ட மலை உச்சிகள்
அழிந்தது   போல;   முடியும்   எனும்   எல்லையில்   - அழிந்து
விடுவானெனும்  அளவில்; நெடியன் குறியன் எனும் நீர்மையினான் -
நெடியனும்   குறியனும்   ஆகும்  என்கிற  தன்மை    உள்ளவனாகிய
அனுமன்; முந்தினன் - முன்வந்து தோன்றினான்.  ஆல் - அசை.
 

                                                 (90)
 

                                  வச்சிரத்து எயிற்றவன் செயல்
 

8392.கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை, நெடும் புகழ்ப் பைங்கழலான்
புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற.

 

கிடைத்தான்     - தன்முன் வந்து தோன்றியவனாகிய; கிளர்வான்
அடைத்தான் என
- விளங்குகின்ற ஆகாயத்தை அடைத்தவன் என்று
(கூறும்படி);  மீது உயர் ஆக்கையினை படைத்தானை - மிக உயர்ந்த
உடம்பு  படைத்தவனாகிய; இகல் மாருதியை - பகைத் தொழில் வல்ல
அனுமனை; நெடும் புகழ் பைங்கழலான் - மிக்க புகழை உடைய பசிய
வீரக்கழலை  அணிந்தவனாகிய  வச்சிரத்து  எயிற்றன்;  அகல் மார்பு
பொடிச்சிதற
  -   அகன்ற   மார்பு  பொடியாகச்  சிதறும்  படியாக;
புடைத்தான் - அடித்தான்
 

                                                  (91)
 

                                        அனுமன் கொல்லுதல்
 

8393.எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா,
வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய்
முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால்.

 

எற்றிப் பெயர்வானை   -  (தன்   மார்பு  பொடிச்சிதற)  அடித்து
செல்பவன் ஆகிய வச்சிரத்து எயிற்றவனை; இடக்கையினால்