யார் மேல் இருக்கிறான் (எங்கிருந்து போரிடுகிறான்); இன என்று - இத்தன்மையான் என்று; அறியாம் - (நாம்) அறியோம். |
(94) |
8396. | ‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்?’ என்று ஆறாயிர வானவரும், அறிவின் தேறா வகை நின்று, திரிந்துளதால்- பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே. |
ஆறாயிர வானவரும் - ஆறாயிரம் தேவர்களும்; நூறாயிர கோடி கொல் - நூறாயிரம் கோடி (குதிரைகள் போர்க்களத்தில்) உள்ளன போலும் (என்றும்); அன்று கொல் என்று - அன்று போலும் என்றும் (தடுமாறி); அறிவின் தேறாவகை - அறிவின் (துணைகொண்டு) தெளிய முடியாத படி; பாறு ஆடு களத்து - கழுகுகள் பறக்கிற போர்க்களத்தில்; ஒரு பாய்பரியே - (பிசாசனுடைய) ஒப்பற்ற பாயும் தன்மை உள்ள குதிரை; திரிந்து நின்றுளது - சுற்றித் திரிந்து நிற்பதாகும். ஆல் - அசை. |
(95) |
8397. | கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்; விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்; உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய், மண்ணில் திரியாத வயப் பரியே. |
மண்ணில் திரியாத - நிலத்தில் திரிதலைச் செய்யாத; வயப்பரியே- (பிசாசனுடைய) வலிமையான குதிரை; கண்ணின் கடுகும் - கண் பார்வையை விட விரைந்து செல்லும்; மனனின் கடுகும் - மனத்தைக் காட்டிலும் வேகமாகச் செல்லும்; விண்ணில் படர் காலின் - வானத்தில் செல்லுகிற காற்றைக் காட்டிலும்; மிகக் கடுகும் - மிக வேகமாகச் செல்லும்; உலாய் உள் நிற்கும் எனின் - உலவிப் போர்க்களத்தின் கண் நிற்கும் என்றால் (அப்போதே); புறன் நிற்கும் - அதற்கு வெளியேயும் நிற்கும். |
(96) |
8398. | மாப் புண்டரவாசியின் வட்டணைமேல் ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால் பூப் புண் தர,-ஆவி புறத்து அகல, கோப்புண்டன, வானர வெங் குழுவே. |