பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 455

‘ஓகைப்     பொருள்  இன்று’  என  -   மகிழ்ச்சிக்குரிய  செய்தி
சொல்வதற்கில்லையே  என்று;  உள் அழியா - மனம் வருந்தினவராய்
(அத்தூதர்);  வேகத்து  அடல்வீரர்  - போர்ச் செயலில் வல்லமையும்
அஞ்சாமையும்  உடைய  படைத்தலைவரும்  அவர்தம்    படைஞரும்;
விளிந்த   எலாம்   -  இறந்த  செய்தியை  எல்லாம்; சோகத்தொடு
சொல்லினர்
- வருத்தத்துடன் கூறினார்கள்.
 

இராவணன்     தன்     குடிகளைப்    பொறுத்தவரை    சிறந்த
மன்னனாகையால் ஒப்பற்ற மன்னன் என்றார்.
 

                                                  (2)
 

8404.சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,
இன்னாத மனத்தின் இலங்கையர்கோன்,
வெந் நாக உயிர்ப்பினன், விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்:

 

சொன்னார்    - தூதர்கள் படைத்தலைவர் வதையுண்டமையைக்
கூறினார்கள்;    அவர்   சொல்  செவியில்   தொடர்வோன்   -
அவ்வுரையினைச்   செவியினிடத்துக்   கேட்டவனாகிய;   இன்னாத
இலங்கையர்கோன்
    -       துன்புற்ற     மனத்தினையுடைய
இலங்கையர்களுக்குத்    தலைவனாகிய    இராவணன்;    வெந்நாக
உயிர்ப்பினன்
- கொடிய நாகம் போற் (சீற்றத்துடனாகிய) பெருமூச்சை
விடுபவனாய்; விம்மினன் - பொருமினான்; அன்னான் நிலை கண்டு -
(அப்படிப்பட்ட)  அவனுடைய   நிலையைக்கண்டு;   அயல்  நின்று
அறைவான்
 -  (மகரக்கண்ணன்)  அவ்விராவணன்  அருகில்  நின்று
கூறுவானாயினன்.
 

                                                  (3)
 

           மகரக்கண்ணன் போர்க்குத் தன்னை அனுப்ப வேண்டுதல்
 

8405.‘முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,
அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ?

 

எந்தாய்    - எந்தையே! மொய் அமர்வாய் - நெருங்கிய போரில்;
என  தாதையை -  என்னுடைய தந்தையை; ஆர் உயிர் உண்டவன்
உயிர்மேல்
 -   ஆருயிர்  கொண்டவனாகிய  இராமனின் உயிர்கொள;
முந்தே - (இதுவரை போரில் அழிந்தவர்களுக்கு) முன்னமே;