உந்தாய் - என்னை ஏவாமல் விடுத்தாய்; அந்தோ - ஐயோ! எனையாதும் உணர்ந்திலையோ? - என்னுடைய வலிமைத் தன்மையினை எவ்விதத்தும் உணரவில்லை போலும்? ஒரு நீ இடர் கூருதியோ? - (அங்ஙனம் அறிந்து ஏவாமையின்) ஒப்பற்ற நீ துயர் மிக்கிருக்கக் கடவையோ? |
(4) |
8406. | ‘யானே செல எண்ணுவென்; எய்த அவன் தான் நேர்வது தீது எனவே தணிவேன்; வானே, நிலனே, முதல் மற்றும் எலாம், கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ? |
அவன் எய்த - அவ்விராமன் இவ்விடம் வர; யானே செல எண்ணுவன் - (அவன் வருகையை அறிந்து) யானே (என் வஞ்சினம் முடிக்க) அவன் மேல் போர்க்குச் செல்ல எண்ணுவன் (எனினும்); தான் நேர்வது தீது எனவே - (தலைவனிருக்க) தானே ஒரு முடிவெடுப்பது தீமையெனவே; தணிவேன் - அடங்கியிருக்கின்றேன்; (அங்ஙனமன்றி) கோனே - தலைவனே! வானே, நிலனே முதல் மற்றும் எலாம் - வானும் நிலமும் முதலாக எல்லா இடங்களிலுமுள்ள எல்லாப் பொருள்களும்; எனை வெல்லது ஓர் கொள்கையதோ? - எனை வெல்லும் படியான தன்மை யுடையதோ? |
தலைவனாகிய இராவணனின் அனுமதிக்காகக் காத்து அடங்கியிருந்ததல்லால் பகை கண்டு அஞ்சியோ, வென்றி குறித்து ஐயப்பட்டோ அடங்கி இருக்கவில்லை என்பதை மகரக்கண்ணன் தெளிவு படுத்துகின்றான். |
(5) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
8407. | ‘அருந் துயர்க் கடலுளாள் என் அம்மனை, அழுத கண்ணள், பெருந் திருக் கழித்தல் ஆற்றாள்,"கணவனைக் கொன்று பேர்ந்தோன் கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்" என்றாள்; பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி" என்றான். |