பக்கம் எண் :

460யுத்த காண்டம் 

துதிக்கையினின்றும்     உண்டாகிய; விலாழிநீ்ர்த் துவலை தூற்ற -
உமிழ் நீர்த் துவலை எங்கும் சூழவும்; செல்பெருங் கவியின் சேனை -
(அரக்கர்   சேனையை)  எதிர்த்துச்  செல்லுகின்ற  பெரிய  குரங்குச்
சேனை;   அமர்த்தொழில்  சிரமம்  தீர்ந்த -  போர்த்  தொழிலால்
உண்டாகிய வருத்தம் நீங்கப் பெற்றன.
 

                                                 (10)
 

8412.‘முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை,
தழங்கின; வயவர் ஆர்த்தார்’ என்பதோர் முறைமை தள்ள,
வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின்காறும்;
புழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக.

 

‘முழங்கின    யானை’ - யானைகள் முழங்கின; வாசி ஒலித்தன் -
குதிரைகள்   ஒலித்தன;  முரசின்  பண்ணை  தழங்கின  -  முரசின்
தொகுதிகள்  ஒலித்தன;  வயவர் ஆர்த்தார் - வீரர்கள் ஆர்த்தார்கள்;
என்பதோர்  முறைமை  தள்ள  -  என்று  கூறப்படும் ஒலி முறைமை
நீங்க;  பதலை  ஓதை -  பதலை என்னும் கருவியால் எழுந்த ஓசை;
அண்டத்தின்  வரம்பின்காறும்  வழங்கின  -  அண்டம் முழுமையும்
(எல்லை   வரையிலும்)   வழங்கின;   கால்புகப்  புரை  இன்றாக  -
(அதனால்)   காற்றுப்  புகவும்  (இயங்கவும்)  இடமின்றிப்  போகவே;
உயிர்கள் யாவும் புழுங்கின - எல்லா உயிர்களும் வேர்த்தன.
 

முழங்கின,  ஒலித்தன,  தழங்கின,  ஆர்த்தார்,  வழங்கின  என ஒலி
குறித்த சொல்வளம் நோக்குக.
 

                                                 (11)
 

                        அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல்
 

8413.

 வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில்
                                    வெம் போர்
சய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர் சேர்த்தி;
கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்
எய்தன எறிந்த; யானை ஈர்த்தன, கோத்த சோரி.