பக்கம் எண் :

462யுத்த காண்டம் 

      கைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின்
                                         வாங்கி,
மொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர்
                                         முன்பர்.

 

வானர    வீரர் - வானர வீரர்கள்; மைந்நிற அரக்கர் வன்கை
வயிரவாள் வலியின் வாங்கி
- கரிய நிறத்தையுடைய அரக்கர்கள் தம்
வலிய  கையிலே  பிடித்த உறுதியான வாளினை தமது வலிமையினால்
பிடுங்கி; மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர் - (அவ்வரக்கர்களுடைய)
உடலின் மார்புப் பகுதியில் எறிந்து கொல்லுவார்கள்; அரக்கர் முன்பர்
-  அரக்கரில் வலிமையுடையவர்கள்;  வீரர்  கைந்நிறைத்து  எடுத்த
கல்லும் மரனும் தம்  கரத்தின் வாங்கி
- வானர வீரர்கள் கைகளில்
நிறைய  எடுத்த மலையையும் மரத்தையும்  தம் கைகளினாலே பிடுங்கி;
மொய்ந்நிறத்து  எறிவர்  எற்றி    முருக்குவர்   -   (அவ்வானர
வீரர்களுடைய) வலிய மார்பிலே எறிவாராய் அடித்துக் கொல்வர்.
 

                                                 (14)
 

                                     மகரக்கண்ணன் வஞ்சினம்
 

8416.வண்டு  உலாம்  அலங்கல்  மார்பன்  மகரக்கண்,  மழை
                                      எறு என்ன,
திண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித்
                                         தேரை,
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப்
                            படையைக் கொன்றான்.
 

வண்டு     உலாம் அலங்கல் மார்பன் - வண்டுகள் மொய்க்கும்
படியாக  மாலையை  அணிந்த மார்பை உடையனும்; மகரக்கண் மழை
ஏறு என்ன  திண்திறல்  அரக்கன்
- மகரக்கண்ணையும் இடியேற்றை
ஒத்த  மிக்க  வலிமையையும்  உடைய  அரக்கனாகிய மகரக்கண்ணன்;
குரங்கு இனப்படையைக்  கொன்றான்   -  குரங்குக்  கூட்டமாகிய
சேனையைக் கொன்றவனாய்; கொற்றப் பொன் தடஞ்சில்லித் தேரை
- (தனது) வெற்றி பொருந்திய அழகிய பெரிய சக்கரத்தையுடைய தேரை;
தண்டலை மருத வைப்பின் கங்கை நீ்ர் தழுவும் நாட்டு - சோலை
சூழ்ந்த   மருத  நிலத்தைக்  கொண்ட  கங்கை  நீரால்  சூழப் பெற்ற
(கோசல) நாட்டை உடைய;