கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான் - மேகம் போன்ற நிற்த்தை உடையவனான இராமன்மேல் (போர் வேண்டி) ஓட்டிச் சென்றான்; |
(15) |
8417. | ‘இந்திரன் பகைஞனே கொல்?’ என்பது ஓர் அச்சம் எய்தி தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி; சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்: |
இந்திரன் பகைஞனே கொல் என்பதோர் அச்சம் எய்தி - (அவ்வாறு மகரக்கண்ணன் வருதலைக் கண்ட வானர சேனை) முன்னர் வந்த இந்திரனுக்குப் பகைவனான இந்திரசித்தோ என்பதாகிய ஒரு பயத்தை அடைந்து; தந்திரம் இரிந்து சிந்த - படைநிலை கெட்டுச் சிதறி ஓடவும்; படைப் பெருந் தலைவர் தாக்கி எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார் - வானர சேனைப் பெருந்தலைவர்கள் அவனோடு பொருது, எந்திரம் எறிந்தாற் போல (அவனால் விடப்பட்ட) அம்பினால் தாக்குண்டு புரண்டாராகவும்; எய்தி - (இங்ஙனமாகப் படை நிலை கெடவும் தலைவர் புரளவும் போர் புரிந்த வண்ணம்) இராமனைச் சென்றடைந்து; சுந்தரத் தோளினானை நோக்கி நின்று- அழகு பொருந்திய தோளினையுடைய அவ்விராமனை நோக்கி நின்று; இனைய சொன்னான் - இவ்வாறான (கீழ்வருமாறு) சொற்களைச் சொல்பவனானான். |
(16) |
8418. | ‘"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உணடாய்" என்னும் முன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி, நின்னுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென்’ என்றான்- பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான். |
பொன்னுடைத் தாதை - பொன்போன்ற நிறத்தை உடைய மகரந்தத்தை; வண்டு குடைந்து உணும் பொலம் பொன்தாரான் - |