பக்கம் எண் :

464யுத்த காண்டம் 

வண்டுகள்    குடைந்து    உண்ணும்படியான மிக்க அழகிய மாலையை
உடைய  மகரக்கண்ணன்; "என்னுடைத்  தாதை  தன்னை இன்னுயிர்
உண்டாய்"
 - (இராமனை நோக்கி) "என்னுடைய   தந்தையினது இனிய
உயிரை நீ போக்கினாய்" என்னும் முன் உடைத்தாய தீய முழுப்பகை
-   "என்று   (எனக்கு)   முன்னமே    உண்டாகிய  கொடிய  பெரும்
பகையானது;  மூவர்க்கு  இன்றி, நின்னுடைத்து  ஆயது அன்றே -
மும்மூர்த்திகளிடம் இல்லாமல் உன்னிடத்து உள்ளது அல்லவா? இன்று
அது  நிமிர்வென்  என்றான்
 -  இன்று  அந்தப் பகையை  நீக்கித்
தலையெடுப்பேன்" என்று சொன்னான்.
 

                                                 (17)
 

8419.தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்,-
‘நீ கரன் புதல்வன்கொல்லோ? நெடும் பகை நிமிர வந்தாய்;
ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு?
                                            ஐய!
ஏயது சொன்னாய்’ என்றான்,-இசையினுக்கு இசைந்த
                                       தோளான்.

 

இசையினுக்கு     இசைந்த தோளன்,  சேவகன்  -  புகழுக்குப்
பொருந்திய  தோள்  வலி உள்ளவனும் வீரனுமாகிய இராமன்; தீயவன்
பகர்ந்த  மாற்றம்   தெரியக்   கேட்டான்
  -   கொடியவனாகிய
மகரக்கண்ணன்  சொன்ன  சொற்களை  விளங்கக்  கேட்டு;  "நீ கரன்
புதல்வன்  கொல்லோ
 - நீ கரனுடைய மகனா? "நெடும் பகை நிமிர
வந்தாய்
 -  (நின்னுடைய)   பழைய  பகையைத்  தீர்த்துக்  கொள்ள
வந்திருக்கின்றாய்; "ஆண் பிறந்து  அமைந்தார்க்கு  ஆயது கடனே
அன்றோ
 -  (ஒரு குடியில்  ஆண்மகனாகப் பிறந்து வளர்ந்தவர்க்குத்
தந்தை  மேல  வந்த  பழியைத் தீர்ப்பது கடமையல்லவா; "ஐய! ஏயது
சொன்னாய்"  என்றான்
 - ஐயனே! நீ தகுதியானதையே சொன்னாய்"
என்று கூறினான்.
 

                                                  (18)
 

                            மகரக்கண்ணன் - இராமன் போர்
 

8420.உரும்  இடித்தென்ன  வில்  நாண்  ஒலி படுத்து,
                                 ‘உன்னோ எந்தை
செரு   முடித்து,   என்கண்   நின்ற  சினம்  முடித்து
                               அமைவென்’ என்னா,