| மகரக் கண்ணன் வதைப் படலம் | 465 |
| கரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த காலம், பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல் பகழி பெய்தான். | உரும் இடித்தென்ன வில்நாண் ஒலிபடுத்து - இடி இடித்தாற் போல வில்லினது நாண் ஒலியைத் தோற்றுவித்து; ‘உன்னோடு எந்தை செரு முடித்து’ - ‘உன்னோடு என் தந்தை காரணமாக ஏற்பட்ட போரை முடித்து; ‘என் கண் நின்ற சினம் முடித்து அமைவென்’ என்னா - ‘எனது கோபத்தையும் தீர்த்துக் கொள்வேன்’ என்று சொல்லி (மகரக்கண்ணன்); கருமுடித்து அமைந்த மேகம் - சூல் முதிரப் பெற்ற மேகம்; கால் பிடித்து எழுந்த காலம் - (வானத்தின மீது) மழைக்கால் பற்றி எழுந்த காலத்து; பெருமுடிக் கிரியில் பெய்யும் தாரை போல்,பகழி பெய்தான் - பெரிய முகடுகளையுடைய மலையிற் பொழியும் தாரைபோல் அம்புகளைச் சொரிந்தான். | (19) | 8421. | சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி, அரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து, தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ நெரிந்து எழு புருவத்தான்தன் நிறத்து உற்று நின்றது அன்றே. | சொரிந்தன பகழி எல்லாம் - (இராமன்) தன்மேல் மகரக் கண்ணனால் ஏவப்பெற்ற எல்லா அம்புகளையும்; கூர்க் கடுங்கணைகள் தூவி அரிந்தனன் அகற்றி - வெம்மையும், ஒளியும் பொருந்திய அம்புகனை ஏவி ஒடித்துத் தள்ளி; மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து - ஆனபின்பு ஆண்மைக் குணமுள்ள அந்த மகரக்கண்ணனுடைய மாலையை அணிந்த மார்பிலே; தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்- ஒரு கணை பாயும் படியாக இராமன் ஆராய்ந்து எடுத்து ஓர் அம்பினை எய்தான்; ஏவ - (அப்படி அவன்) செலுத்த; நெரிந்துஎழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது அன்றே - (அவ்வம்பானது, கோபத்தால்) வளைந்து எழுந்து புருவத்தை உடைய மகரக்கண்ணனது மார்பிலே அழுந்தி நின்றது. | (20) |
|
|
|