| 8422. | ஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர, தூவுண்ட வயிர வாயி ஆயிரம் தூவி ஆர்த்தான். | ஏவுண்டு துளக்கம் எய்தா - (இரமானால் எய்யப்பட்ட) அம்பு தைத்து நடுங்கி; இரத்தகப் பரிதி ஈன்ற பூவுண்ட கண்ணன் - செந்நிறத்தை உடைய சூரியனால் மலர்விக்கப் பெற்ற செந்தாமரைப் பூப்போன்ற கண்களை உடைய மகரக்கண்ணன்; வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் - வாயில் முன்னமே உண்ட புகையைக் கக்குபவன் போன்றவனாகி (நெருப்பை உமிழ்ந்துகொண்டு) தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சேர - தெய்வத்தன்மை பொருந்திய புகழை உடைய இராமனது அழகிய கவசத்தில் தைக்கும் படியாக; தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் - (பகைவரது) தசையில் தோய்ந்த திண்ணிய ஆயிரம் அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்தான். | (21) | | 8423. | அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்: ஆழி மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாய்கி, பொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி, வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீ்ழ்த்தான். | அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்- (மகரக்கண்ணன்) அவ்விதம் அம்பு எய்ததைக் கண்ட தேவர்கள் (இப்படியும் எய்ய முடியுமோ என) வியப்படைந்தனர்; ஆழி மன்னனும் முறுவல் எய்தி -ஆணைச் சக்கரத்தை உடைய இராமனும் புன்முறுவல் பூத்து; வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி - கூர்மையான ஆறு அம்புகளை எடுத்த; பொன்நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி - (அவ்வம்புகளால்) அழகிய நெடிய பெரிய தேரில் பூட்டப்பெற்ற குதிரைகளின் குளம்புகளைத் துண்டித்து; வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்து வீழ்த்தான் - மகரக்கண்ணன் பிடித்திருந்த வில்லை நடுவிடத்தே |
|
|
|